மயக்கம் என்ன
மயக்கம் என்ன
1 min
343
நுகர்வு வெறியில்
மயங்கிக் கிடக்கும்
புலன்களின் அறியாமையில்
உணர்வுகளும் சேர்ந்து புலன்களுக்கு ஆதரவு கொடுக்க
இன்பம் துய்த்து
துய்த்த இன்பத்தால்
புலன்கள் மரத்துப்போக
மதிமயங்கி
உணர்வுகள் மழுங்கி
நுகர்ந்த இன்பங்களை
மனது நினைவு வைத்திருப்பதால்
மீண்டும் மீண்டும்
அதே இன்பங்களைத் தேடி ஓடி
இன்பங்கள் கிடைத்தாலும்
நுகர முடியாது
உடல் சோர்வுறும்போது
மனம் வெறுப்படைந்து
பழைய நினைவுகள்
ஏக்கமாக மாறி
மனதை அலைக்கழிக்கும் போது
எதிலும் சுவாரசியமின்றி
சலிப்படையும் போதுதான்
புலன்களால் உருவாகும் இன்பம்
பூஜ்ஜியம் என்பது புரியும்!