தவம்
தவம்
கட்டிய மனைவியை கடைசி வரைகண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவையில்லை.
இருபத்தியொரு வயது வரை அவனவன்சொந்த ஆன்மா கர்ம செயலுக்கு வராது.அந்த ஆன்மாவின் ஸ்தூலத்தை தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும்.
96 தத்துவங்கள் முடிவு பெறுவது 21 வயதிலேஅதன் பிறகே அவன் சொந்த கர்மாவானது கர்ம செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும்.
த்யான மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
என சிரசு ஏற பல வழிகள் உள்ளது. ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம் ஒன்றே.
சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது. சக்தி மாறி சிவம் சேர்ந்தால் பிறவியே சிக்கலே. உடல் பொருத்தம் பூமியில் ஜெயிப்பதில்லை ஆன்ம பொருத்தமே பிறவியை ஜெயிக்கும். அப்பேற்பட்ட சக்தியோடு சிவம் சேரும் போது ஸர்வமும் ஸாந்தியாகும்.
சிவசக்தி சங்கமத்தில் ஊடலும் கூடலும்உற்சாகம்தானே. ஆனால் சக்தியின் கண்ணீர் துளிகளுக்கு சிவன் காரணமானால் அதை விட கொடியகர்மா உலகில் இல்லை.
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம்வழிகள் தர்மத்தில் உள்ளது உண்மையே. ஆனால் உறவுகளைக் கொண்டே உலகம் தன்னை வெல்வதும் பிறவிப் பிணி அறுக்கவும் உலகம் அறியாத ஒரு வழி உள்ளது.
சொந்தம் என்பது பழைய பாக்கி என்பதை அறிந்தவனுக்கு சொந்தம் ஒரு சுமை இல்லை. நட்பு என்பது பழைய பாக்கி என்பதைபண்போடு அறிந்தவனுக்கு பதற்றம் இல்லை.
எதிரி என்பவன் தன் கர்மாவின் தார்மீக கணக்கே என தனித் தன்மையோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லை. உனது எதிரியும் நீயே
உனது செயலே கர்மாவாகிஅந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும் ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கெதிராக பயன்படுத்துகிறது என நீ உணரும் போது. உன் எதிரி முகத்தில் உனது கர்மா உன் கண்களுக்கு தெரிய வந்தால். எதிரி உனக்கு எதிரே இருந்தாலும் கலக்கம் தேவைப்படுவதில்லை.
உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும் பழைய கணக்காய்.பழைய கணக்கு புரிந்தால் பந்தபாசம் சகோதரத்துவம் மீது பற்றற்ற பற்று வைத்து பிறவி கடனை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால் உனக்கு பக்கத்தில் சரிபாதி அமரும் மனைவியார் என்று உனக்கு புரியும்.
தாய் தந்தையரை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி தாயார் வழி ஏழேழு ஜென்மகர்மாவில் இருந்து தப்பிக்கலாம். உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பொருத்து உபகாரமாக உதவி வந்தால். எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உனது ஏழேழு ஜென்மத்து சமுதாய கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
கோவில்கள் செல்வதாலோ குடந்தை சென்று மகாமக திருக்குளத்தில் புண்ய நீராடுவதாலோ உன் வாழ்க்கையில் ஒன்றும் மாறாது சிறிது காலம் சிறு இன்பம் மட்டும் கிடைக்கும்.