அம்மா
அம்மா
ஜனித்த நொடி முதல்
உன் கண்ணுக்குள்
எனை வைத்து காக்கின்றாயே
உன் அன்புக்கு விலையேதம்மா
மடி தந்து ஆறுதல் தருகிறாயே
உனக்கு நிகர் யாரம்மா
செய்யும் தவறினை திருத்தி
கொள்ள வாய்ப்பளிக்கிறாயே
என் வழிகாட்டி நீயம்மா
துவளும் போது தோள் தட்டி
உற்சாகப்படுத்துகிறாயே
கடவுளின் மறு உருவம் நீயம்மா
எனக்காகவே சிந்தித்து
உன் பொழுதினை கடத்துகிறாயே
உனக்கு நிகர் வேறெதுமில்லையம்மா.