ஏக்கம் கொண்ட மனம்
ஏக்கம் கொண்ட மனம்
கருத்தைச் சொல்ல நட்பிடம் ஓடினேன் கேட்கவில்லை;
காதலிடம் ஓடினேன்
கருத்தில் கொள்ளவில்லை;
இயற்கையிடம் ஓடினேன்
பதிலளிக்கவில்லை;
இறுதியில் இறைவனிடம் ஓடினேன்
கவிதை என்னும் பரிசைக் கொடுத்தனுப்பினான்;
ஏக்கம் கொண்ட மனது பேசத் தான் ஆசைக் கொண்டதென்று யார் புரிந்துக் கொள்வாரோ?