இயற்கையின் சீர்திருத்தம்
இயற்கையின் சீர்திருத்தம்
ஆலைகள் வெளியேற்றும்
நாற்றமெடுக்கும் நீரும்
சாயம் சுமந்த கழிவுத் தண்ணீரும்
அழுக்கு நுரை பொங்கப் பொங்க
ஆற்றை அடைக்கும் நஞ்சும்
சில நாட்களாய் படிப்படியாக குறைய
இந்த இடைப்பட்ட காலத்தில்
இயற்கையே தன்னை சீர்செய்து கொள்ள
தெளிந்த நீரும் தான் தண்மையை பரப்ப
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாய்
சிறிது நேர இளைப்பாறலில்
புத்துணர்வு தேடும் காளைகள் !