கண்ணா மணிவண்ணா வா வா
கண்ணா மணிவண்ணா வா வா
கோடி மின்னல் எழிலரசு கண்ணன் வந்தான்...
விடியலை எழ வைக்க
குழல் ஊதினான்...
மானிடம் மகிழ்ந்தெழ
தமிழோதினான்...
பண்ணோடு மலர்மகழ
மனம் ஏவினான்...
நன்றோடு நலம் விளைய
சுடர் வீசினான்...
அந்த இறைவனும் எனக்குள்
அருள் நிரப்பினான்...
ஒப்பற்ற ஒளிமயத்தில்
உறவாக்கினான்...
அந்த ஒப்பற்ற அருளில்
அவனிடம் தவமாக்கினான்...
தன் வாயில் உலகளந்து
திகழ்வாகினான்...
என் உயிரில் அவனுலவி
அருள் நிறைக்கிறான்...
தடை யாவும் பொடிபட
பொருளாகிறான்...
மெய் பிறவியை
பொய்யின்றி
நெறியாக்கினான்...
மதிக்கின்ற துதிக்கவன்
துணையாகினான்...
எனக்குள்ளே இணையற்ற
இறையாகினான்...
கண்ணா மாயலோகா
சுப சுர சுதியே...
என் கதியே மணிவண்ணா வா...வா...