மானுடம்
மானுடம்
குரு தட்சணைக்கும்
குருவிற்கான தட்சணைக்கும்
இங்கு விளக்கம் இல்லை
மதி அவன் கெட்டு மயங்கி மங்கிப் போனான்
இங்கோ விளங்கா மனிதன் விலங்காய்ப் போனான்
அன்றோ குரு தட்சணை தந்து மானுடம் வாழ்ந்தது
இன்றோ குருவிற்கு தட்சணை தந்து மானுடம் செத்தது
நீண்ட நெடும் காலம் கடந்தும்
நீதி இதுவென்று அறியா மானுடம்
நடு வழியில் தவிக்கிறது
படகொன்று செய்து கரையேற சொன்னால்
படகெதுவோ? கரையெதுவோ?
எனக் கேட்டு மதியிழந்து
ஆமை போல் அடக்காமல்
அறியாமையில் அடங்கி
களைத்து திழைத்து
தனது இறுதிப் பயணத்தை முடித்துக்கொள்ள விழைகிறது
மானுடம்