மாற்றங்கள் தேவை
மாற்றங்கள் தேவை
காலங்கள் மாறினால்தான் பருவநிலை மாறும்,
சூரியன் உதித்தால்தான் மாலையில் மறையமுடியும்,
இரவு என்பதுவந்தால்தான் விடியல் வரும்,
வாழ்க்கையில் துன்பம் இருந்தால்தான் இன்பத்தை தேடுவோம்.
துன்பமில்லை எனில் நாம் இன்பத்தை உணரமுடியாது!
வாழ்வின் சூழல்கள் தினமும் ஒவ்வொரு நிமிடமும் மாறும்,
எது எவ்வாறு மாறினாலும் நம் முயற்சி மாறாமல் இருக்கணும்,
அவ்வாறாயின் வாழ்க்கையில் வெற்றி நம்மை தேடிவரும்.
மாற்றம் இல்லா வாழ்க்கை ஒரு புதிய மாற்றத்தை ஈட்டாது,
மாற்றம் என்றும் தேவை, கடின உழைப்பு உயர்வை உறுதிசெய்யும்.