பெண்ணே !
பெண்ணே !
தடைகள் ஆயிரம் வரினும்
துவண்டு விடாதே
தங்கப் பெண்ணே !
பாரங்கள் பல உன்மேல்
விழுந்தாலும் - வீழ்ந்திடாதே
வண்ணப் பெண்ணே !
நெஞ்சுரம் மிகக் கொண்டிடு
அஞ்சாமையை துணை கொண்டிடு
சின்னப் பெண்ணே !
வாழ்க்கையும் வானமும்
அனைவருக்கும் பொதுவே
வாய்ப்புகள் அனைவருக்கும் சமமே ....
சிறகை விரித்திடு !
சிட்டெனப் பறந்திடு !