புதிய பாதை
புதிய பாதை
பெண்ணென பிறந்துவிட்டோம் என வருந்தாதே,
பார் போற்றும் புகழ் உன்னைத் தேடி வரும் கலங்காதே,
கண் மூடி உறங்காமல் உன் கனவுப் பாதையை தொடரவே,
உன் எஞ்சிய வாழ்க்கையை காரணங்களால் தொலைத்திடாதே,
துணிந்து செல்; முன்னேறு உலகம் உன் கை வசம் வரும் வரை,
விழி மூடாமல் ஓய்ந்து போகாமல் சோர்ந்து தளராமல்,
(தன்)நம்பிக்கையும் விடாமுயற்சியும் உன் தோழிகளாக உடன்வைத்து எழுந்து,
உன் வாழ்க்கையை மாற்றி புதிய பாதை ஒன்றை கண்டெடு பெண்ணே!!!