உள்ளாய்வு
உள்ளாய்வு
1 min
314
இமைக்கும்
நொடிகளில் கூட
அளவற்ற கனவுகளால்
எண்ணம் சீர் குலைந்து
மனம் அதற்கு அடி பணிந்து
வெள்ளையில்
வண்ணச் சாயம் பூசி
மகிழ்ச்சி தொலைக்கும்!
உள்ளத்தின் உள்ளே
மிளிரும் ஆன்மா மறந்து
செய்யும் தொழிலில்
இறை காணாது
எதெதெற்கோ
அலைந்து திரிந்து
எங்கும் நிலை கொள்ளாமல்
தேடியது மறந்து
பரிதவிக்கும் நிலையில்
சில நொடிகளாவது
உள்ளே உற்று நோக்க
உயிரின் உண்மை புலப்படும்.