நன்றிக்கடன்
நன்றிக்கடன்
நன்றிக்கடன்
நன்றிக்கடன் என்றாலே என் மனதில் பதிந்த ஒரு குரல்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
இந்த குரல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நமக்கு உதவி செய்தவர்களை நாம் எப்போதும் மறக்கவே கூடாது. அப்படி மறந்தால் நாம் மனித பிறவிகள் இல்லை மிருகம் தான்.
அதுவே நமக்கு கெட்டது செய்தவர்களை நாம் மறந்துடலாம். ச்சீ போன்னு நம்ம வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வைத்து விட்டு நம்ம வேலைய பார்த்து போய்க்கிட்டே இருக்கலாம்.
இன்னும் ஒன்று நாம கஷ்டத்தில் இருக்கும் போது உதவி செய்தவர்கள் கிட்ட உதவிய வாங்கிட்டு பிறகு நாம நல்ல நிலைக்கு வந்த பிறகு உதவி செய்தவர்களை உதாசீனம் செய்ய கூடாது.
அவங்க அப்போ உதவி செய்தலன்னா இப்போ இந்த நல்ல நிலைக்கு வந்துருக்கவே மாட்டோம் என்ற நன்றிக்கடனை மறக்கக்கூடாது. இதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.
என்றும் நன்றிக்கடனை மறவாதீர்கள்.