தங்கச்சி
தங்கச்சி
நாங்க மூன்று பேர் ஆண்கள்,கடைசியாக எங்கள் அன்பு தங்கை.சாவித்திரி.எங்கள் குடும்பம் அவ்வளவு வசதி உள்ள குடும்பம் அல்ல.அப்பா ஒரு அரசாங்க ஊழியர்.கிடைத்த வருமானத்தில் எல்லோரையும் படிக்க வைத்தார்.அதுவே அவருக்கு பெரிய சுமை.
மூத்த அண்ணன் வேலைக்கு போகும் போது அப்பா பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.கிடைத்த ஓய்வூதியம்,கூட மூத்த அண்ணன் சம்பளம் குடும்பத்தை ஒரளவு காப்பாத்தி வந்தது.
அண்ணனுக்கு வயது ஏறி கொண்டே இருக்க,அவருடைய நிறத்திற்கும்,பண்புக்கும் ஒரு பெண் கிடைத்தது.அப்பா இல்லாத பெண்,அண்ணன் பராமரிப்பில் வளர்ந்த பெண்.வசதி குறைவு தான்
அவர் திருமணம் இனிதே நடந்தது .
அப்புறம் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும்.மாப்பிள்ளை?
எங்கள் அண்ணியின் அண்ணனுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதுவும் இனிதே நடந்தது.
அப்புறம் அப்பா இறந்து போக,அம்மா இறந்து போக,அவரவர் குடும்பம் என்று வாழ்க்கை ஓடி கொண்டு இருந்தது.என் மனைவிக்கு கொஞ்சம் காலிமனை இருக்க அங்கு ஒரு சின்ன ஒட்டு வீடு கட்ட முடிவு செய்து கட்டும் போது,கட்டி கொடுத்தது என் மைத்துனர் தான்.இருந்தும் ஒரு 5000 ரூபாய் கொடுக்க முடியாமல் போக வேலையை முடிக்கவில்லை.
எப்படியோ நகையை வைத்து திருப்பி பணம் கொடுத்து விட்டேன்.
ஆனால் அந்த நகையை மீண்டு எடுக்க இரண்டு வருடம் ஆகியும் முடியவில்லை.இந்த நேரத்தில் என் தங்கை கணவர் அதை கொடுத்து உதவ,மனைவியின் நகையை மீட்டு கொடுத்தேன்.
நாட்கள் சென்றது.என் தங்கை கடனையும் திருப்பி அடைத்து விட்டேன்.அந்த நல்லவரை தெய்வம் வாழ விடவில்லை.எலும்பில் புற்று நோய் தீவிரமாக தாக்கி சிறு நீரகம் செயல் இழந்து விட்டது.இந்த நேரத்தில் கிட்ட தட்ட 60000 வரை நான் செலவு செய்தேன்.ஆனாலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
அவர் என்னுடைய கஷ்டமான நேரத்தில் உதவிய நாளை மறக்காமல் அவருக்கு என்னால் உதவ முடிந்தது என்று ஆறுதல் அடைந்தேன்.
இப்போது எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறோம்.அன்று அவர் செய்த உதவி மறக்க முடியாத ஒன்றாகும்.