தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கூடுதலான கவனம், தெளிவான நோக்கம் மற்றும் தீவிரமான செயல்பாடுகள் ஆகியவை படைப்புத் துறையில் ஒரு மேம்பட்ட தனித்துவத்தையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும். ஸ்டோரி மிரர் உங்கள் அனைவருக்காகவும் ஒரு தனித்துவமான 52 வார எழுத்து சவால் - 2020 (மூன்றாம் பதிப்பு) அறிவிக்கிறது. இந்த போட்டி உங்களின் எழுத்து திறனை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். வலுப்படுத்தும். மேலும் உங்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும்.
இந்த போட்டியின் மூன்றாவது சீசனில் 10 மொழிகளில் துவங்கி, இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
உங்களின் எழுத்து மற்றும் படைப்பாற்றலை தீட்டிக் கொண்டே மிகப்பெரிய எழுத்து சவாலுக்கு தயாராகுங்கள்!
விதிகள் :
1. பங்கேற்பாளர்கள் 52 கதைகள் அல்லது 52 கவிதைகளை தொடர்ச்சியாக 52 வாரங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும், அதாவது, ஒவ்வொரு வாரமும் அந்தந்த வகையின் (கதை / கவிதை) கீழ் உள்ளடக்கம் சமர்பிக்க வேண்டும்.
2. உதாரணமாக, நீங்கள் சமர்ப்பிப்பதை 2020 ஜனவரி 3 வது வாரத்திலிருந்து தொடங்கினால், 2021 ஜனவரி 3 வது வாரம் வரை சமர்ப்பிக் வேண்டும்.
3. பங்கேற்பாளர்கள் வெவ்வேறு பிரிவுகளில் (கதை / கவிதை) பதிவு செய்யலாம். இருப்பினும், 52 சமர்ப்பிப்புகளின் ஒவ்வொரு தொகுப்பும் ஒரே வகை (கதை அல்லது கவிதையின்) கீழ் இருக்க வேண்டும்.
4. இந்த போட்டியின் கீழ் எழுத்தாளர் சமர்ப்பிக்க ஆரம்பித்தவுடன் சமர்ப்பிப்பதில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது தொடர்ச்சியாக சமர்பிக்க வேண்டும்.. இடைவெளி இருந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
5. ஒரு வருட 52 வார சவால் சிறு குறு சவால்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- 13 வாரங்கள் எழுதும் ஒரு சவால்
- 26 வாரங்கள் எழுதும் ஒரு சவால்
- 39 வாரங்கள் எழுதும் ஒரு சவால்
6. தங்கள் படைப்புகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விருப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். அனைத்து 52 படைப்புகளுக்கும் இது ஒட்டுமொத்த மதிப்பெண்ணாக இருக்கும்.
7. அனைத்து படைப்புகளும் //contest.storymirror.com கீழ் சமர்பிக்க வேண்டும், இல்லையெனில் படைப்புகள் வெற்றிபெறும் தகுதியை பெறாது.
8. ஸ்டோரி மிரரின் முடிவு இறுதியானது மற்றும் இது பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
பரிசு :
1. ஒவ்வொரு பிரிவிலும் 52 வார சவாலை முடித்த முதல் 10 இடங்களுக்கு ஸ்டோரி மிரர் சான்றிதழ் வழங்கும்.
2. ஒவ்வொரு மொழியிலும் இரண்டு வெற்றிபெற்ற படைப்பை (1 கதை + 1 கவிதை) புத்தகமாக ஸ்டோரி மிரர் வெளியிடும்.
3. 13 வாரங்கள் நிறைவடைந்தவுடன்: டிஜிட்டல் சான்றிதழ் கிடைக்கும் (பயணத்தின் 1/4 வது முடிவு)
4. 26 வாரங்கள் முடிந்ததும், அதாவது பயணத்தின் 1/2 முடிவுடன் : உங்களுக்கு இலவச தங்க உறுப்பினர் + சான்றிதழ் கிடைக்கும்
5. 39 வாரங்கள் முடிந்ததும், அதாவது பயணத்தின் 3/4 முடிவுடன் : ஸ்டோரி மிரர் உங்கள் மின் புத்தகம் + சான்றிதழை அறிமுகப்படுத்துகிறது
தகுதி:
போட்டி காலம் - ஜனவரி 1, 2020 முதல் ஏப்ரல் 15, 2021 வரை
சமர்ப்பிக்கும் காலம் - ஜனவரி 1, 2020 முதல் ஏப்ரல் 15, 2021 வரை
பதிவு - ஏப்ரல் 15, 2020 குள் பதிப்பிக்க ஆரமித்து ஏப்ரல் 15, 2021 வரை
தொடர்ச்சியாக பத்திபிக்க வேண்டும்.
முடிவுகள் - ஜூன் 2021
உள்ளடக்க வகை: கதை, கவிதை
தொடர்பு கொள்ள: marketing@storymirror.com / 022-49243888 / 022-49240082