திருமணம்
திருமணம்
இரு உள்ளங்கள் இணைவதே திருமணம்
ஊரே வந்து வாழ்த்த
பெரியோரெல்லாம் ஆசிகள் வழங்க
சுற்றம் புடை சூழ நடந்திடுமே திருமணம்
வலிமையை தரும் திருமணம்
நட்பை உருவாக்கும் திருமணம்
புது உறவுகளை உருவாக்கும் திருமணம்
நிறைந்த பங்காளிகளை உருவாக்கும் திருமணம்
இன்பத்தில் இணைந்து துன்பத்தில் தோள் கொடுப்பதே திருமணம்
குறையாத அன்பே திருமணம்
புரிந்து கொள்ளும் மனமே திருமணம்
விட்டுக் கொடுக்கும் பண்பே திருமணம்
வளம் பெற்று பெரு வாழ்வு வாழ்வதே திருமணம்
வாழ்க்கையில் ஒரு முறை வரும் திருமணம்
நிறைவுடன் வாழ்வதே அதன் நோக்கம்