தோழி
தோழி
நகுல் தனது மொபைலில் அன்று நேரத்தை பார்த்து கொண்டு படுத்து கொண்டிருந்தான்.
நேரம் இரவு 09:30 மணி,நகுலின் இரு கைகளின் கட்டை விரல்கள் முக்கியமான ஒரு ஆளுக்கு டைப் செய்து கொண்டிருந்தன.
அவன் தனது பிரண்ட் அன்னி,அவளுக்கு வாட்ஸ் அப்பில் மெசெஜ் செய்து கொண்டிருந்தான்.
அன்னி,நகுல் ஒரே பள்ளியில் பத்தாவது வரை படித்தவர்கள்.
ஆனால் பள்ளி காலத்தில் இல்லாத நட்பு அவர்களுக்கு இந்த சோஷியல் மீடியா மூலம் வளர்ந்தது.
அன்னியை பற்றி நினைத்த அனைத்தும் நகுலுக்கு தவிடு பொடி ஆகின,பள்ளியில் அமைதியாய் இருந்த அன்னி இப்பொழுது நன்றாக பேச ஆரம்பித்தாள்,அவள் குணாதிசயங்கள் மாறி இருந்தன,சோஷியலஸ் ஆகியிருந்தாள்
அன்னியும் நகுல் பற்றி நினைத்தது தவறு,பெண்களிடம் பேச மாட்டான் என்று நினைத்த அவள், அவன் தன்னிடம் பெண்கள் பேச மாட்டார்கள் என நினைத்ததை அவளிடம் கூறினான்.
அன்னி கேட்டுவிட்டு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை,நார்மலா போய் பேசு இதுல என்ன இருக்கு என கேட்டாள்.
பின்பு நகுல் தன் காதல் நிராகரிக்கப்பட்டது பற்றி கூறினான்,அந்த பெண் மீது கோபம் இல்லை ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறினான்.
இருவரும் நெடு நேரம் பேசி கொண்டிருந்தார்கள்.
கடைசியாக,அன்னி நகுலுக்கு ஒரு அட்வைஸ் கூறினாள் "நீ உன் படிப்பில் நல்லா கான்ஸன்டிரேட் பண்ணு,இதெல்லாம் உன் வாழ்க்கையிலே அவசியம் இல்லாத விஷயங்கள் இந்த காதல்,பொண்ணுங்க கிட்ட கண்டிப்பா பேசுறது,பொண்ணுங்களில பிரண்ட்ஸ் இருக்கணும்னு இல்ல,பிரண்ட்ஸ்க்கு ஜெண்டர் இல்லை சரியா.
உனக்கு லொன்லியா இருந்தா,என் கிட்ட பேசு சரியா,டேக் கேர்,பை" என பேசி முடித்தாள்.
நகுல் அவளுக்கு தாங்க்ஸ் சொல்லி விட்டு மொபைலை லாக் செய்து வைத்தான்.