அம்மா
அம்மா
அம்மா
உழைப்பு தான் என் மூச்சு என்று இருந்தாயே அம்மா
நாங்கள் துரும்பைக் தூக்கிப் போட்டால் கூட உங்கள் கண்களில்,
கண்ணீர் தாரை தாரையாக
வழிந்தோடும் ஏ அம்மா,
விண்ணுலகில் இன்று நீ தேவனுக்கு பணிவிடை செய்ய பறந்தோடி விட்டாய்
எங்களை எல்லாம் பார்க்க யார் இருக்கிறார்கள்??
நாங்கள் உழைக்கிறோம் வியர்வையை வழி கிறது
அப்போதுதான் தெரிகிறது உன் வியர்வை ,
உன் உழைப்பின் மகிமை.
இன்று கை நிறைய பணம் சம்பாதிக்கிறோம் அம்மா
ஆனால் அதை அனுபவிக்க நீதான் அருகில் இல்லையே ??
அம்மா ஏன் இந்த பாகுபாடு
உழைக்கும் நாளெல்லாம் நீ எங்களுக்காக உழைத்து
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து விட்டாய்
அம்மா இன்று ஓய்வு எடுக்கும் தருணத்தில்
நீ ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தேவனுக்கு
பணிவிடை செய்யக் கிளம்பி விட்டாயே
அம்மா அங்கேயும் உ னக்கு ஓய்வு கிடைக்காது என்று நினைக்கின்றோம்...