சாலையோர தேனீர் கடை
சாலையோர தேனீர் கடை
கதிரவனின் செங்கதிர்கள் வானத்தை சூழ,
சிறந்த இசையை இயற்கை வாயிலாக பறவைகள் சொல்ல,
தென்றலின் தீண்டலால் இலைகளின் அசைவுகள்;
சற்று தொலைவில் 'செய்திகள் வாசிப்பது' என ஒலியும்
காற்றின் வருடலால் ஓலையின் சத்தமும் சேர,
செங்கதிர்கள் கண்ணாடி கோப்பையை ஊடுருவ
காலை பொழுதை அழகாக்கியது தேனீர்கடை ;
அரசியல் பேசி வழிபோக்கர்களின் வழிகாட்டியாக தேனீர்கடை அன்பர்கள்,
வருடங்கள் கடந்து ஆர்வத்துடன் ஊருக்கு சென்றேன்.
அதிர்ச்சி! நெடுஞ்சாலைத்துறையால் காணாமல் போனது,
தேனீர்கடை மட்டுமல்ல என் நினைவுகளும் தான்!!!