சமத்துவ சமுதாயம்
சமத்துவ சமுதாயம்
அன்னையவள் வயிற்றில்
கருவாக அரும்பி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
பத்திரமாய் பார்த்துப் பார்த்து
பத்தியமும் பல நாள் இருந்து
அன்னையுமே பூரிப்புடன் காத்திருக்க
பிறந்தது பெண் மகவென்றதும்
சுற்றத்தின் கருத்தெலாம் பொருட்டல்ல !
ஏனோ - அன்னையவளே
மனம் நொந்தால்
யார் என்னென்று சொல்லியே தேற்ற?
ஆண் - பெண் பாகுபாடு
அன்னையவள் தவிர்த்து
பிள்ளைகளை சமமாய் காண்கையில்
மலருமே சமத்துவ சமுதாயமே !