எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு
கோவத்தை எதிர்பார்த்தேன் ..
கேள்விகளை எதிர்பார்த்தேன்...
புரிதலை எதிர்பார்த்தேன்...
வெகுண்டு எழுவாய் என எதிர்பார்த்தேன் .
வேதனைப்படுவாய் என எதிர்பார்த்தேன்
காயப்படும் போது கடந்து சென்றுவிட்டு....
நடுநிலை என்ற பெயரில் நகர்ந்து சென்றுவிட்டு...
ஏதோ உறவு என்ற பெயரில். மவுனம் காத்துவிட்டு...
எதுவுமே நடக்காதது போல் ஒரு சந்திப்புக்கு அழைக்கின்றாய்.....
அந்த அழைப்பை தவிர்ப்பதை தவிர....
என்ன செய்வது...
என்ன சொல்வது...
சமூகப்புரிதலற்ற மனநிலையை....