கொரானா பாடம்
கொரானா பாடம்
காசும் பணமும் கரையும் என்று
காற்றோடு பரவவிட்டாயோ!
நானும் அவளும்
வீட்டோடு கூடியிக்க
வேண்டுதல் நிறைவேற்ற வந்தாயோ!
நாளும் ஒருவர் பேச நேரம்
கொடுத்தாயோ!
தூக்கும் நேரம் இல்லை என்றவன்
எண்ணம் மறைய வந்தாயோ!
தொலைந்த வாழ்வை புரணமைக்க
ஒரு வாய்ப்பும் கொடுக்க வந்தாயோ!
புலம் பெயர்ந்தவன் நிலை
புலப்படுத்த வந்தாயோ!
உன் புகழ் பாடி தன் நிலை
உணர செய்தாயே!
தன் நிலை மறவா வாழ்க்கை தொடர
உன் மறைவிலும் வேண்டும்
என் இறைவா!