கரம் தொடும் பக்தி
கரம் தொடும் பக்தி
கரம் தொழும் கதிரவனை...
கரம் தொடும்
பக்தியிது...
கரம் பற்றி கதிரதனை
பூமிக்கு வரவேற்று...
தீமைக்கு தீர்வெழுதி
திருப்பி செல்ல வேண்டணுமே...
மலையழிக்கும்
பாதகத்தை...
பூமி மாற்றும்
பூகோள விசித்திரத்தை
கல்கோரி அவலத்தை
மாற்ற மனு கொடுப்போமே...
தாயான விளைநிலத்தை
காசுபண மோகத்தில்
காற்றாடி அபகரிக்கும்
கேவலத்தை மாற்றுவோமே ...
வருத்தி அழைக்கிறோம்
கதிரவனே...
மக்கள் நல விருத்திக்காய்...
மேலோட்டமாய்
கதிரே ...நீ
மேவுவது போதாது...
இறங்கி வந்து
பூமிக்கு மேலும்
தொண்டு செய்யணுமே
மானிடரதில் மீளணுமே...
உன் பிறப்பும்
நானறியேன்...
இறவாக் கதிரவனே
இரக்கம் காட்டு...
பல ஆள் உணர்வும்
சரியில்லை...நீ
எம்மை ஆள்கிற
உணர்வாளர்...
ஆளுமை திறனாளர்...எம்
ஆளுனரே சரியற்றால்
சரிந்திடுமே
சமுதாயம்...
நிஜமான உலகை
நிர்வகிக்க...
உனக்கும் மனமுண்டே...
தொடரட்டும்...
உன் தயை தொண்டே...