கடவுள்
கடவுள்
கடவுளை சந்தேகித்தாகிவிட்டது...
இருந்தால் நல்லாயிருக்கலாம் என்று பேசியுமாகிவிட்டது..
பகைத்தலில் தொடங்கிய
இருக்கின்றதற்கான காரணங்கள் தேடுதலில்..
இல்லை என்று தீர்மானித்தாகிவிட்டது....
உருகி உருகி அவரிடம் பேசிய பேச்செல்லாம்.. அந்த காலத்தில் என்று கடந்து விட்ட காலமாகி ஓரத்தில் எங்கோ போட்டாகிவிட்டது...
நாளும் கிழமையும் தவறாமல் செய்த பூஜைகளெல்லாம்..இன்று மற்றொரு நாளாய் கடந்து செல்வதை பார்த்தாகிவிட்டது...
தான் மட்டுமே தனக்கென்று புரிந்து
தன்னை மட்டுமே தாங்கி நடக்கப்பழகிய பிறகு.. ..
இடறுகின்ற தருணங்களில் எல்லாம்..தானே தனக்கான கடவுளாகி போவது அனிச்சை செயலாகி போனது நம்பிக்கை கொடுத்து நாளைய விடியலை எதிர் கொள்ள...