மதி
மதி
பெளர்ணமி நாளன்று
நிலவைக் கண்டு சேவல் கூவியது
புலர்ந்தது பொழுது மேகத்தை கிழித்து இதோ சூரியன் வந்தான் என்று
அதன் சகாக்களோ, முட்டாளே இது நிலவு! சூரியன் அல்லவே என்றன
அதைக் கேட்ட சேவலோ
மதிக்கும் பதிக்கும் வேறுபாடறியா தன் விதியை நொந்து கொண்டது
விலங்கறியா மானுடமறியா மந்தையிலே ஒருத்தன் இந்த முட்டா சேவல கூறு போடனுங்குறான்
விதியோ! சதியோ! மதியோ!
விலங்கானாலும் விளங்கிக் கொள்ளனும்
விலகி கொல்வது என்பது கூடா காரியம்
மங்குவதும் மயங்குவதும்
எனக்கானது மட்டும் அல்ல உனக்கானதும் தான்
காத்திரு
வரும் உனக்கான வசந்தம்
என்று சேவலின் நிலை கண்டு பேசியது மதி...