பாலைவன காதல்
பாலைவன காதல்
பெண்ணவள் ஜனித்த
தினத்தினில் இருந்து
வாழ்க்கை பாலைவனமாக
கலையிழந்து போய் கிடக்க....
நின் வருகைதனில்....
நின் களங்கமில்லா பாசமதில்
நின் எல்லையற்ற காதலினால்
மங்கையவளின் மகிழ்ச்சியில்லா
பாலைவன வாழ்க்கை கூட
பல வண்ணங்கள் உள்ள....
எல்லா வளங்களும் நிறைந்த
சோலைவனம் ஆகுமே....