புதைகுழிகள் பூக்கள்
புதைகுழிகள் பூக்கள்
காற்றின் முதுகில்
பள்ளி மணியோசை
கையில் நாற்றுகளுடன்
நிமிரும் கூன் விழுந்த பார்வை
பரந்த வானில்
ஒற்றையாய் விரியும் சிறகு
ஓட்டைக் கூரையில்
ஒழுகும் சூரியன்
முதுகு கீறும்
வைர ஊசியாய்.
களைத்துப் போன
சேற்றுக்கால்களுக்குக்
களத்துமேட்டுக் கருவேல மரங்கள் தாம்
எப்போதும் ஆசுவாசக்குடைகள்.
இருட்டைச் சுவாசிக்கிறது
கரையான் தின்னும் குடிசை.
சிக்கிமுக்கிக் கற்கள் கிடைக்குமா?
தீக்குச்சியின் கொண்டையில்
குழந்தையின் பெருங்கனவு.