தாய்த்தமிழே
தாய்த்தமிழே
தமிழே வணக்கம்!
இலமுரியாக் கண்டத்தின் செம்மொழி செங்கோலே!
கீழடி.... ஆதிச்சநல்லூர்...
அகழ்வாராய்ச்சி பறைசாற்றும் பலநூறு சாட்சி!
உலகறியும் உனது ஆட்சி!
இலக்கண இலக்கியங்களை உன்னிறு கண்களாய் கொண்டாய்!
சங்ககால... சங்கம் மருவிய காலமுமாய் இரு இலக்கிய பெரும் பிரிவுகளை கண்டாய்!
உம்மைப் பாட்டிடையிட்டவரை யாம் முழுமையாக அறிந்தோமில்லை!
தொகுத்தவர் தொகுப்பித்தவரை.... அனைவரையும் அறிந்தோமில்லை!
கண்டங்கள் பல கடந்து அண்டம் அளந்தவளே!
அகரமுதல...என அய்யன் வள்ளுவன் உலகப் பொதுமறை ஈந்தாய்!
கம்பநாடனின் காவியமீந்தாய்!!
நாலடி.... நாண்மணிகடிகையீந்தாய்!!!
இரட்டைக் காப்பியமீந்தாய்!!!
முண்டாசுக்கவி பாரதி
பாக்களீந்தாய்!!!இலக்கிய அரண்மனைகளுக்கு எல்லாம்
இலக்கண அரண்கள் அமைத்தாய்!!! முரணெனும் திறனமைத்தாய்!!!
ஈரமும் வீரமுமாய்.... எதுகை மோனையென விகற்பமீந்தாய்!!!
இன்னும் அடிகள் நீண்டாலும்....அவை அனைத்தும் நினைவில் பட்டனவற்றை விரல்நுனிபற்றி வரிசையிடும் மழலை முனகல்கள் மட்டுமே!!!
அன்னிய தேசத்தே ஓர் குரல் ஒலிக்க கண்டோமே.... "இங்கு ஓர் தமிழ் மாணவன் உரங்குகிறான்"... என்று!!!
உன் மீதான என் பற்றை
எப்படி சொல்லி முடிக்க.....
மெல்லிடையில் மேகலையை அணிந்தவளே!!!
என் தாய் தமிழெனும்
இளைக்காத தலைக்கணதோடே உனை வணங்கி தமிழினம் சேர்கிறேன்!!!!🙏🏻🙏🏻🙏🏻