Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

VIJAYA RAGAVAN S

Classics

3  

VIJAYA RAGAVAN S

Classics

திருக்குறள் 04. அறன் வலியுறுத்தல் (36-40) - மு .வா உரையுடன்

திருக்குறள் 04. அறன் வலியுறுத்தல் (36-40) - மு .வா உரையுடன்

1 min
229


36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.


மு.வரதராசனார் உரை:

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.


37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


மு.வரதராசனார் உரை:

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.


38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.


மு.வரதராசனார் உரை:

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.


39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.


மு.வரதராசனார் உரை:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.


40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.


மு.வரதராசனார் உரை:

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.



Rate this content
Log in

Similar tamil poem from Classics