பசுமை புதைந்த விதை
பசுமை புதைந்த விதை
புதைந்த நாளெல்லாம்
விதையினுள் முடங்கி
மறைந்து தவமுற்ற
மரத்தின் உயிரின் கரு
விண்ணின் மழைத்துளி
மண்ணினை நனைத்திட
நிலமகள் மகிழ்ந்திட
விதையது பிளந்து
திறந்து வழிவிட
மரக்கன்று முளைத்து
தலையினை வளைத்து
உயிர்தரும் பகலவன்
ஒளியினை வணங்கி
ஒளிதந்த பலத்தால்
தலையினை நிமிர்த்தி
எழுந்து வளர்ந்
விண்ணினை நோக்கி
செழித்து உயர்ந்து...
பறவைகள் குடும்பம்
மகிழ்ந்தும் கூடியும்
கூடுகள் கட்டியும்
முட்டையிட்டு குஞ்சுகள்
பொறித்து குஞ்சுகளோடு
மகிழ்ந்து களிக்கவும்
கொஞ்சிக் குழவவும்
கிளைகளின் இடையிலும்
இலைகளின் நடுவிலும்
இடங்களை கொடுத்து
மானுடர் தொடங்கி
பட்சிகள் விலங்குகள்
உள்ளிட்ட உயிரினங்கள்
யாவையும் உண்டுயிர்
வாழ்ந்திட காய்களையும்
கனிகளையும் கைமாறு
எதையும் எதிர்பாராது
கனிவுடன் கொடுத்த
மரத்தின் மகிமையை
அறியா மனிதர்கள்..
மரங்களை வெட்டி
கொன்று குவித்திடும்
கொடிய கொலைப்பழி
தலைமுறை தாண்டி
தந்திடும் தண்டனை
வாராது தடுத்திட
மரங்களை காப்போம்
மரக்கன்றுகளை நடுவோம்
இரா பெரியசாமி...