உணர்வதுனையே
உணர்வதுனையே
என் அழிபசி தீர்க்க உன்முன் நின்றேன்
வந்துவிடுகிறேன் என்று பொய் பூசி சென்றாய்.
உன்னுடன் தர்க்கம் செய்ய வந்தேன்
என்னுடன் மூர்க்கம் கொண்டு சென்றாய்.
தேட்டை நீர் தேடி ஓடினேன்
தேடிய தேட்டத்தை கனல் கொண்டு எரித்தாய்.
பாறை துகள் போல் கண்ணீர் சிந்தினேன்
ஆலங்கட்டி இட்டு கண்ணீரை துமி ஆக்கினாய்.
கடல் கடைந்து அமிர்தம் எடுத்தேன்
அதில் நஞ்சை கலந்து என் உயிரைக் கேட்கிறாய்.
தூக்கம் கலைத்து நிமிர்ந்து அமர்ந்தேன்
கூன் விழ என்முதுகில் சவாரி செய்கிறாய்.
பொருக்க முடியா வருத்தம் என்னிடம் இல்லை
ஓர் வேளை இருப்பினும்
உன்னிடமதை பொருத்த மனமில்லை.
காலங்கள் ஓட
ஓடிய கால்கள் ஓர்
ஓய்ந்த உடல்
தோய்ந்து படுக்கையில்
விழித்து உணர்வது உன்னையே.