விடிவு காலம்
விடிவு காலம்
விடிவு காலம்...❤️🤗
விடியும் காலம் மட்டும்
விடிவு காலமில்லை...
நாம் விழிக்கும்
காலமே நமக்கு
விடிவுகாலம்...
நாம் விழியால் மட்டும்
விழித்தால் போதாது...
அன்பால்...மனதால்
விழிப்பதே விடியல்...
பொலிவென பொழிந்து...இரவை
கழிவென கழித்து...
கிழக்கை கிளர்த்தி
நல்லொளி புகுத்தி
வளமென வளர்த்து...
தகதக தங்கம்
அங்கம் சிலிர்த்து
கடலை தழுவி
மலையை தழுவி...
மானிடம் விழிக்க
மாதவம் திகழ
உழைத்தே உயரும்
உன்னதமே நிலைக்க...
தன் வரவால்
நலம் பெருக்கும்
கதிர் வரவின்
தவம் புகழ்வோம்...
தனக்கொரு
துணையின்றி...
தனக்கிணை
ஏதுமின்றி...
கால கணக்கெடுக்க
நிலவின் பிறை வளர்த்து...
மாதவம் வளர்த்து
மாதங்கள் தொகுத்து
ஆண்டுகள் வகுத்து...
தன் ஆயுள்
அழிவற்ற ஆதவனாரே
வணங்குகிறோம்
உன்னை...
ஒளிச்சேர்க்கை
தனை ஈந்து...
திசைகளின்
வகை ஈந்து...
ஈடிலா இன்பம் பெற
எங்கும் தங்கும்
மங்கள திருவிளக்கே
கதிரே உனை
வணங்குகிறோம்...
கிரகத்தில் ஆணாய்
சூரிய வம்சமாய்
வாழ்வியல் அம்சமாய்
பிறப்பிறப்பற்ற
மானிட பற்றே...
கதிரே உனை
வணங்குகின்றோம்...
கால கணக்கெடுப்பில்
ஆறறிவும்...
பல்லுயிரும்
மாயவே மாயம் செய்து...
கடலும் மலையும்
இயற்கையும்
மாயாது ...
மகிமை செய்து...
பூமியில்
எம்மையும்...எம்
தலைமுறையும்
தொகுத்து பகுத்து
காக்க கதிரே
உனை வணங்குகின்றோம்!