எளிமை
எளிமை
அது ஒரு பணக்காரர்கள் தங்கும் விடுதி.அங்கு வரும் விருந்தினர்கள்
விலை உயர்ந்த கார்களில் மட்டுமே வருவார்கள்..வாடகை வாகனம் ஆக இருந்தால் கூட விலை உயர்ந்த வாகனத்தில் வரும் விருந்தாளிகளுக்கு தான் மதிப்பு அதிகம்.
அன்று காலை,மணி எட்டு,அதிகாலை பயணம் காரணமாக,உடை சற்று கசங்கி இருந்தது.ஆனாலும் தூய வெண்மை உடை,சிறு கறையும் கூட எங்கும் இல்லை.அப்படி ஒரு நிலையில் ராஜா அந்த விடுதியின் வாயிலில் இருந்து வரவேற்பை நோக்கி நடந்து வந்தான்.
அவனுடைய எளிய தோற்றத்தை தவறாக எடை போட்டு வாயில் காப்போன்,அவரை தடுத்து நிறுத்தி
என்ன வேண்டும் என்று விசாரித்து கொண்டு இருந்தான்.
ராஜாவும் முன் பதிவு விவரத்தை கூற,அவனுக்கு நம்பிக்கை வராமல், தன் மேலதிகாரி யை தொடர்பு கொண்டு விவரம் கேட்டான்,மேலதிகாரி,சற்று பொறு,நானே வருகிறேன் என்றான்.ராஜா விடம் பெட்டி எதுவும் இல்லாததால்,வாயில்காப்போனுக்கு
சந்தேகம்.
அந்த மேலதிகாரி அங்கு வர,அதே நேரம் ராஜாவின் விலை உயர்ந்த காரும் வந்து நிற்க,அதில் இருந்து அவனுடைய உடமைகள்,கார் டிரைவர் காரில் இருந்து எடுத்து வர,
மேலதிகாரி தவறை புரிந்து கொண்டு ராஜாவை கை குலுக்கி ,மன்னிப்பு கேட்டு உள்ளே அழைத்து வந்தார்.ராஜாவின் கார்,அவனது நண்பனை பக்கத்து விடுதியில் இறக்கி விட சென்று வந்தது அந்த நேரத்தில் காலாற நடக்க எண்ணி நடந்து வந்த எளிமை அவனை வாயிலில் தடுத்து நிறுத்தியது
எளிமையை கடைபிடித்து நடக்க முயன்றது தவறு என்று போல தெரிகிறது.இந்த உலகம் திருந்தாது
என்று எண்ணி தனக்கு ஒதுக்க பட்ட அறையை நோக்கி நடந்தான்