ரேகா அம்மா
ரேகா அம்மா
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வீடே கலகலப்பாக தயார் ஆகி கொண்டு இருந்தது.
ரேகா தன்னுடைய வயிற்றில் உள்ள குழந்தையை தன் கைகளை வயிற்றில் வைத்து உணர்ந்து கொண்டிருந்தாள்.
அவளது கணவன் வினோத் ஒரு கிப்ட் பாக்ஸ் உடன் வந்தான்.
ரேகா அதை திறக்க அவளுக்கு பிடித்தமான சிரிப்பு கதை புத்தகங்களும்,மனதிற்கு இதமான பாடல்கள் மற்றும் இசைகள் இடம்பெற்ற எம்பி 3 பிளேயர் ஒன்றையும் வைத்திருந்தான் வினோத்.
வினோத்,ரேகா,இசை என்று சொன்னதும் உங்களுக்கு ஞாபகம் வந்தது ப முதல் நீ முதல் நீ படம் தானே,ஆம் எனக்கு பிடித்த படம்.
ரேகா தன்னுடைய வேலையில் இருந்து மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தாள்.
அவளுக்கு பல நாட்களாக வீட்டில் மாமனார்,மாமியார்,அம்மா,அப்பா முகத்தையே பார்த்து வந்தாள்.
அதுவும் கொரோனா வரவும் யாரும் எங்கேயும் செல்லவில்லை.
தற்போது வளைகாப்பு வந்த அனைவரையும் வினோத் சனிடைசர்,முக கவசமுடன் கவனித்தான்.
ரேகாவிற்கு வண்ண வண்ண வளையல்கள் கையில் அணிவிக்கபட்டன.
3 1/2 மாதங்கள் கழித்து,
வினோத் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றான்.
ரேகா பிரசவ வலியால் மருத்துவமனயில் இருந்தாள்.
அங்கு சென்ற வினோத் அவள் கையை பிடித்து எல்லாம் ஒன்றும் இல்லை சரியாகிடும் என கூற,வலியில் துடித்த ரேகா அவனை ஒரு அறை அறைந்தாள்.
மருத்துவர் வந்ததும் வினோத் அங்கேயே இருக்கேன் என கூற ரேகாவிற்கு நம்பிக்கை அளித்து கொண்டிருந்தான் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால்.
"நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் எதுவும் சாதிக்க முடியாது".
பிறந்த பெண் குழந்தையை வாங்கிய வினோத் கண்கள் ரேகாவை நோக்கி சென்றன.
ரேகா மயக்கத்தில் இருந்தாள்.
குழந்தையை நர்ஸ்ஸிடம் கொடுத்து விட்டு ரேகா நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்தான் வினோத்.
குழந்தையை மயக்கத்திற்கு பின் வாங்கிய ரேகா மனதில் ஒரு புது உணர்வு தாய்மை
இல்லை அது அவள் கருவுற்றவுடன் மனதில் வந்து விட்டது.
அந்த குழந்தையை தாங்கினாள் ரேகா.
அந்த குழந்தையை வளர வளர தவறு செய்தால் முதலில் கண்டிப்பது ரேகா தான்.
அவள் குழந்தையின் பெயர் கார்மேகக்குழலி.
23 வருடங்கள் கழித்து,
உயர் படிப்புக்காக கார்மேகக்குழலி வெளிநாடு செல்ல சில நாட்களே இருந்தன.
சமைத்து முடித்து விட்டு பாடல் கேட்டு கொண்டிருந்த ரேகாவை பின்னிருந்து கட்டி பிடித்த கார்மேக்ககுழலியை திரும்பி பார்த்த ரேகா "எதுக்கு இப்ப இந்த தீடீர் பாசம் என்ன விஷயம் ?" என கேட்க.
கார்மேகக்குழலி என் மேல பாசம் இல்லையா என கேட்க,இல்லை என ரேகா நடந்து சென்று ஒரு டப்பாவை கொண்டு வந்து கார்மேகக்குழலியிடம் கொடுத்தாள்.
அதை திறந்த கார்மேக்ககுழலி மகிழ்ச்சி அடைந்தாள் அவளுக்கு பிடித்த இலந்தை அடை இருந்தது.
படிக்க போற பத்திரமா இரு,தைரியமா இரு,எந்த பிரச்சினை இருந்தாலும் எனக்கோ அப்பாக்கோ போன் பன்னு சரியா என சொல்ல,
கார்மேக்ககுழலி அவள் அம்மாவை கட்டிப் பிடித்து அம்மாவின் தோள் மீது தலை சாய்ந்தாள்.