அப்பா...
அப்பா...
கஞ்சனாக இருந்தாலும்,
பாசத்தில் வள்ளற்!
தன் வருத்தங்களை வெளியிட்டதில்லை;
அவரை கல் நெஞ்சக்காரர் என்றிட முடியாது!
அவர் புகழைத் தேடுவதில்லை;
புகழுக்குச் சொந்தக்காரர் என்பதால்!
அவர் ஒருபோதும் பெருமை பேசியதில்லை;
பெருமையே அவரைக் கண்டு பொறாமை படுவதால்! வாழ்க்கைத் துணைவியின் பிரிவை- எண்ணி வருந்தாமல்;தன் புதல்விகளுக்காக வாழ்பவர்! தன்வளமைக்கு முக்கியத்துவம் தந்ததில்லை; மகள்களே அவரின் குஷியென்பதால்! தண்டிப்பதைவிட கண்டிப்பதே மேல் என்பார்; தன்செல்வங்கள் தலையெடுப்பதால்! வாழ்க்கையில்தன் மகள்கள் வீழும்போது; தாங்கி பிடிக்கும் தூணாக மாறுவார்! எம்பற்று கவியைச் சேரும்; எங்களை வளர்த்து ஆளாகின பெருமையெல்லாம் உங்களைச் சேரும்!