அவளின்றி ஒரு நாள்
அவளின்றி ஒரு நாள்
அவள் நினைவாேடு காலை பிறக்கும்,
பிறை முகத்தாேடு விழிகள் திறக்கும்,
காெஞ்சும் குரலாேடு நாளும் விடியும்,
அவளின் சீண்டும் சாெல்லாேடு புன்னகை மலரும்.....
தினம் பூக்கும் பூக்களும் அவள் கூந்தல் நாடும்,
காேவில் செந்தூரமும் அவள் நெற்றி கேட்கும்,
மதிய வேளை பசியறியாது தவழும்,
இடைவேளை யாவும் யுகமாய் நிலைக்கும்...
நாம் நடந்த பாதை, எதிர்பாத்துக் கிடக்கும்,
விரல்கள் ஐந்தும் அவள் கரம் தேடும்,
துளிகள் மிதந்து இரு இமை தாண்டும்,
அவள் கனவாேடு இரவும் நிறையும்....
அவளின்றி ஒரு நாள்.....