Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Vishnu guhan Sv

Tragedy

4.7  

Vishnu guhan Sv

Tragedy

அவன் அவளிடம்.

அவன் அவளிடம்.

3 mins
364


அவன் அவளிடம்...........


பெண்ணே !

உன்னை காதலிக்கிறேன் !

சம்மதம் சொல் !

எம்மதமும் தேவையில்லை !

எக்குலமும் பெருமை இல்லை !

எனக்கென்று நீ இருக்க !

உனக்கொன்றெனில் நான் துடிப்பேன் !

நண்பர்கள் நல்மனம் சூழ

முடிந்தால் நம் பெற்றோர் சம்மதம் பெற்று

மனம் முடிப்போம் !

இரும்பினில் இணைத்ததாய்

இதயங்கள் இணைந்திருப்போம் !

உன் உறவுகள் மொத்தமாய்

ஓர் உருவில் நான் இருப்பேன் !

தோன்றும் போதெல்லாம் வர்ணனை

கவிதைகள் வாசிப்பேன் !

நிலவுக்கு உயிர் கொடுத்து

அதன் நிழல் தொட்டு விளையாட சொல்வேன் !

உன் பாவனைகளுக்கென ஒரு சுவர்

எழுப்பி அதில் ஓவியம் வரைந்து வைப்பேன் !

வீட்டின் அறைகளில் காற்றை போல்

காதலை நிரப்பி வைப்பேன் !

பாதைகள் நீளும் வரை

பயணங்கள் சென்றிடுவோம் !

நம் பெற்றோர்கள்

நல்ல துணையே பிள்ளைகள் பார்த்துள்ளனர்

என ஒரு நாள் ஒப்புகொள்ளும் படி

வாழ்ந்திடுவோம் !

கடைசியாய் கேட்கிறேன் !

காதலாய் வரவேண்டாம்,

என் காரணமாய் வருவாயா ?!

.............

மௌனத்தில் மிதந்தவள்

தன் தலை உயர்த்தினாள்

கொஞ்சம் குரல் தளர்த்தினாள்

............................

உன் காதலை மதிக்கிறேன்

இருந்தும் சம்மதம் மறுக்கிறேன் !

நீயும் நானும் நாகரிகம் கற்று விட்டோம்

சாதிகள் இல்லை என்போம் !

நம் பெற்றோர்கள் கேட்டதும் கற்றதும்

சாதி கதைகள் தானே,

சாதி கதைகளே அவர்கள் கண்ட சாதனை கதைகள் !

இருந்தும் அவர்களை வெறுத்து

நம் காதலை வளர்க்க எனக்கு மனமில்லை !

இன்னும் சொல்கிறேன்,

இது என் திருமண கனவு ,

தகப்பன் மடிஅமர்ந்து தலை குனிவேன்

கண்ணில் நீர் பெருக்க சிரித்திருப்பேன்

மகள் முடிச்சவிழ்ந்து மனைவி முடிச்சுவிழும் !

அச்சதை மழை பொழிய ! வாழ்வின் அச்சங்கள் கரைந்தோடும் !

என் தகப்பன் என் தாயவளை பார்ப்பான் !

அவள், இன்பத்தின் உச்சியில்

புது பட்டு புடவையின் முந்தானையில்

ஆனந்த கண்ணீர்க்கு அணைகட்டுவாள் !

என் திருமணம் இருமனமாய் வேண்டாம் !

சுற்றத்தின் ஒருமனதாய் வேண்டும் !

அறைகள் நிரப்பிட காதல் வேண்டாம்

வீட்டின் அறைகளெல்லாம் உறவுகள் வேண்டும் !

அந்த உறவுகள் நிரம்பிய மண வாழ்க்கை வேண்டும் !

ஆதலால் காதல் வேண்டாம் !

.......................

அவள் களைத்த மௌனத்தை

ஒருசேர்த்து அவளிடமே கொடுத்துவிட்டு

விடை பெற்றான் !

அவள் காரணமும் மறுப்பதில்லை !

அவன் காதலும் தோற்கவில்லை !

........................

வந்தவழி மறந்து அவன் திரும்பிய வீதியில்,

ஏதோ ஒரு வீட்டில், யாரோ ஒரு சிறுவன்

உரக்க படித்து மனப்பாடம் செய்துகொண்டிருந்தான் !

“சாதிகள் இல்லையடி பாப்பா............” !.

..........................


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy