இது தான் காதலா?
இது தான் காதலா?
எத்தனை முறை முயற்சி செய்யினும்,
உனக்காக வார்த்தைகள் குவிக்க முடியவில்லை...
வலம் வரும் எண்ணங்கள்,
இடம் தேடும் மொழிகள்!
ஆயினும் கோர்க்க தான் நிலை இல்லை...
இது காதலா?
இது தான் காதலா??
ஒரு முறையேனும்,
உன்னை காணும் பொழுது கவி கூற கரைகிறேன்...
எனினும் கண்களில் கலைந்துபோகிறேன்!
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடிகளிலும்,
தாய் போல உணருகிறேன்!
இருந்த பொழுதும் சேயாய் உருவெடுக்கிறேன்!
ஏனடா, எந்தன் மனம் கூறும் பாஷை புரியாதா??
என் வரிகள் கேட்கிறாயே?
கூறுவதில் இல்லை,,
கேட்பதில் இல்லை,
உணறுவதில் உள்ளது!