கண்கள்
கண்கள்
வெண்மையும் கருமையும் கலந்து
காண்போரை கவர்ந்து
ஐம்புலன்களில் சிறந்து
காட்சிகளை பிரதிபலித்து
உள்ளுணர்வை பகிர்ந்து
கண்ணீரை சொறிந்து
கவலைகளை துறந்து
நொடியில் இமைத்து
நம்மை வழிநடத்துவதே கண்கள் !
கற்பனையை கருவாக்கி
உருவகத்தை மெய்யாக்கி
நினைவுகளை நனவாக்கி
தூக்கத்தை தனதாக்கி
கனவுகளை உருவாக்கி
கண்காணிப்பு கருவியாய்
காணும் அமைப்பாய்
காக்கும் கவசமாய்
இன்றியமையாத அங்கமாய்
வாழ்விற்கு ஒளியூட்டுவதும் கண்களே !
நினைக்க மறந்தாலும் இமைக்க மறவாதே
புசிக்கவில்லையேனும் ரசிக்க தவறாதே
பெண்ணை கண்ணென காண்பீர்
இம்மண்ணை உயிரென காப்பீர் !!!