கூண்டு கிளி
கூண்டு கிளி
எளிமையாய் எல்லா இன்னலை
நெஞ்சினில் பாரமாய் சுமந்து
கண்ணீர் கண்களில் வராமல்
நாளும் உலகில் வளம் வருபவள்
ஒரு பெண் ....
அவள் !!!
மகளாய் பெற்றோரின் சுமையறிந்து
சகோதரியாய் உடன்பிறந்தோரின் கவலையறிந்து
நண்பியாய் பருவ நண்பர்களின் குறையறிந்து
குடும்ப நாயகியாய் கணவனின் குறிப்பறிந்து
அன்னையாய் குழந்தைகளின் தேவையறிந்து
ஒவ் ஒரு இல்லத்தரசியும்
தன்னையே அர்ப்பணித்து
சிறகு ஒடிந்த பறவையாய்
கூண்டு கிளியாய் ........!!!