மனிதி
மனிதி
அலையாய் சிரிக்கும் சிரிப்பொலிகள்
அமைதியானது ஏனோ ?
அதிர்ந்து பேசும் குரல்கள்
மெல்லிய அழுக் குரல்
ஆனதேனோ ?
சுற்றித்திரியும் கால்கள்
சிலையானதேனோ ?
சிறகடிக்கும் கரங்கள்
சிறை வாசம் கொண்டதேனோ ?
அழகுற பார்க்கும் பார்வைகள்
இமைக்காது பழுதடைந்ததேனோ ?
வெட்கம் ததும்பும் கன்னங்கள்
வெற்று நிலம் ஆனதேனோ ?
மகளிர் தினம் என இருப்பதால் தானோ !?!
அண்ணாந்து பார்க்காமல் அருகில் வைத்து பாருங்கள் ,
தனியாக ஒதுக்காமல் துணைநிற்கவையுங்கள் ,
இட ஒதுக்கீடு செய்யாமல்
இணையாக ஒப்பிடுங்கள் ,
உவமையாக பார்க்காமல்
உரிமையாக பாருங்கள் ,
ஊமையாக சிந்திக்காமல்
ஊன்றுகோலாக நினையுங்கள் !
பெண்ணை பெண்ணாக பாருங்கள்
பெருமையாக பார்க்காதீர்கள்.......
மங்கையை மனிதியாக பாருங்கள் !!!