மூலிகை எழுதும் கடிதம்
மூலிகை எழுதும் கடிதம்
பகுத்தறிவு நிறைந்த மானிடனே!
அறிவியல் என்பது ஆக்கத்திற்கு
மட்டும்தான் என்பதை
ஏன் மறந்தாய்?!
உலக உயிர்கள் யாவையும்
உயிர் வாழ மரங்கள்
சாக்கடை நீரைக்கூட
ஏற்று தூய காற்றும்
காயும் பழமும்
அளித்து அணுக்கதிர்
வீச்சிலிருந்தும் கெட்ட நோய்களிடம்
இருந்தும் மனிதர்களைக்
காக்கும்போது நீ
மட்டும் ஏன் மனிதா
உனக்கு எல்லைகள் வகுத்து
வாழ்கின்றாய்?
அன்பு மட்டுமே
உலகின் தத்துவம்
என்பதை நீ மறந்தால்
வாழ்கின்ற காலத்தில்
உனக்கு நிம்மதி ஏது?
புத்தரும் இயேசுவும்
பகிர்ந்த அன்பு
நாட்டின் எல்லைகளுக்கல்ல!
வெள்ளைப்புறாக்களும்
பச்சைக் கிளிகளும்
வாலாட்டிக் குருவிகளும்
சுதந்திரமாகப் பறந்து
மகிழ்ச்சியுடன் சுயநலமில்லாமல்
பறந்து திரிவதுபோல
மனிதனும் உலா வருவது எப்போது?
தூய உள்ளமும் பிறருக்கு ஈந்து
மகிழும் குணமும்
எப்பொழுது உலக மக்களிடம்
பிறக்கிறதோ அன்று
சுந்தரன் சஞ்சீவி மலை
தூக்கி வர காத்திருக்கிறான்