பண்டிகையின் பொருள்
பண்டிகையின் பொருள்
நவக் கிரகங்களிலும்
அடங்கியுள்ள பொருள்
அன்புதானே!
தீமை களையும்
சிவப்பு உதிரத்தின்
நிறமன்றோ!
உலகமெங்கும் போரில்லா
நிலை வர வேண்டிய
யாகத் தீயின்
நிறமும் சிவப்பு தானே!
ஒன்பது படிக்கட்டுகளின்
ஒய்யார பொம்மையழகில்
மதி மயங்கிய தெரசா
வெள்ளைப் புறாக்களுடன்
சான்றோர் வரிசையில்
மோனாலிசா புன்னகையுடன்
காந்தியைக் காணாமல்
பண்டிகையின் பொருளை
உணர்த்தி வீற்றிருக்கிறார்!