நான்-அவள்-தமிழ்
நான்-அவள்-தமிழ்
ஏன் நான் அவளிடம் சரணடைகிறேன்
அவள் பேரழகிலா இல்லை கன்னி தமிழிலா
ஒரு கவிதையில் பெரும் தீயை
என்னுள் பற்றவைக்கிறாள்
ஒரு புகைப்படத்தில் குளிர்
தென்றலை பரவச் செய்கிறாள்
அவள் முழுமையால் என்னை மூர்ச்சையாக்குகிறாள் யாருமற்ற தீவில் ஒற்றை ஆளாய்
அவள் நினைவுகளுடன் சுற்றித்திரிகிறேன்
செல்லும் வழியெல்லாம் அவள் கவிதை ஒலித்துக்கொண்டே இருக்கிறது
அவள் என்னுள் நிறைகிறாள்நா
ன் அவளானேன்!!!