பொன் விலங்கு
பொன் விலங்கு
அன்று தலைமுடி
விரித்தால் குற்றம்...
நேற்று தலைமுடி
வெட்டினால் குற்றம்...
இன்று தலைமுடி
அது உடலின் பாகம்..
வளர கூடிய பாகம்...
அன்று கல்வி
அவள் பூப்பெய்தும் வரை..
இன்று கல்வி
அவள் கல்லறை வரை...
இன்று பெண்மை
போற்றப்பட்டு..
பாராட்டப்பட்டாலும்.....
எதோ ஒரு இடத்தில்
பொன் விலங்காய்
அவள் சுதந்திரம்
அடைக்க படுகிறது
என்பது நிதர்சனம்....