வேட்டை தொடரும்
வேட்டை தொடரும்
களிறு பிளறி
பரி பரிந்து
ஈட்டி பாய்ந்து
மூட்டிய போரில்
கொண்டாட்டம் பொங்கியது
புலியின் மரணத்தில்....
வாழும் வாழ்க்கை
சிறந்து இருந்தால்
எதிரி வந்து
கண்ணீர் மல்க
கல்லறை செல்வாய்..
அடுத்தவர் கஷ்டத்தில்
சிரித்து இருந்தால்
நண்பன் கூட இருக்கமாட்டான்
ஈம சடங்கில்..