விவசாயி
விவசாயி
விவசாயி......விவசாயம்
விதைகளை விளைவித்த வித்தகன்!!
நீங்கள் அவனை
எத்தனை முறை வீழ்த்தினாலும்
எழுவான் ஏனென்றால்!!
அவன் தனக்காக வாழவில்லை
நமக்காக வாழ்கிறான்!!
சூரிய குளியல் கூட சுகமே
வியர்வை துளி கூட வாசமே!!
நம் உயிரை காக்க
உணவளித்தவன்!!
அவன் உயிரை காக்க
யாருமில்லை!!
அழிந்து வரும் உயிரினங்களில்
அடுத்த இலக்கு விவசாயி தான்....!
காரணங்கள் பல உண்டு
அவற்றில் இங்கு சில உண்டு
நிலங்கள் வீடு ஆயின!
பயிர்கள் பாழ் ஆயின!
சேற்றிலும் ஊழல்!
சோற்றிலும் ஊழல்!
நெல்லில் நஞ்சாம்
விவசாயத்திலும் விஷமாம்....!!!