புத்தகம்
புத்தகம்
யாருமில்லா எனக்கு,
பழக்கமானாய் வாழ்க்கையின் புது அத்தியாயமாக,
யாரும் சொல்லா உணர்வுகளை உணர்த்தினாய்,
யாரும் சொல்லா கதைகளை பேசினாய்,
யாரும் உணர்த்திடா உறவினை உருவாக்கினாய்,
யாரும் உணர்த்திடா சுதந்திரத்தினை சுவாசிக்க செய்தாய்,
யாரும் அறிந்திடாமல் நேரத்தினை
என்னுடன் செலவளித்தாய்...
நீயில்லா ஒவ்வொரு நிமிடமும்
பெருந்துன்பமாய் மாறி விடும் என்னும் அளவிற்கு....