Pon Kulendiren

Others

4  

Pon Kulendiren

Others

அது எனக்குத் தெரியாதே!

அது எனக்குத் தெரியாதே!

2 mins
321



 லிங்கம் என்ற மகாலிங்கம் என்பவரும் மோகன் என்பவர் இலங்கையில் ஒன்றாக படித்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். அங்கு அரசங்கத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள் பின்பு ஓய்வு பெற்றபின் மகன்மாரின் ஸ்பொன்சரில் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள்.

 இவ்விருவரும் ஸ்காபரோவில் ஒரு மாலை ஒரு மோலில் சந்திக்கிறார்கள்

 

“ என்ன மச்சான் மோகன் உன்னைக் கண்டு கனகாலம் என்ன சிலோன் நியூஸ் சொல்லேன்”, லிங்கம் கேட்டார் .

“ லிங்கம் உனக்கு தெரியுமா கொழும்பில பல மணி நேரம் மின்சார தடையாம் அதோடு ஒரு நாள் ஊரடங்கு சட்டமாம் .”

“ அது எனக்குத் தெரியாதே”

“ மச்கான் லிங்கம் ஆண் நேற்று கொழும்பில் இல என் தம்பி குடும்பத்துக்கு கொஞ்ச காசு அனுப்பினேன். ஒரு கனேடியன் டொலர் 29௦ இலங்கை ரூபாய் போகுது ஆறு மாசதுக்கு முன் ஒரு கனேடியன் டொலரின் பெறுமதி  180 இலங்கை ரூபாய்;

“ அது எனக்குத் தெரியாதே”

“ லிங்கம் உனக்கு தெரியுமா இலங்கையிலே பல கிராமங்களில் விலைவாசி உயர்வினால் மக்கள் கூடி புரட்சி செய்கிறார்கள் என்று “

 “அது எனக்குத் தெரியாதே.”

“மச்சான் இந்த ஆபத்தான நிலையில் இந்தியா கடனுதவி இலங்கைக்கு கொடுத்திருக்கிறது.அது தெரியமா ?”

 “அது எனக்குத் தெரியாதே.”

“ உனக்கு தெரியுமா தமிழ் நாட்டு முதல்வர் குடும்பத்தோடு துபாயில் நடக்கும் கண்காட்சி பார்க்க போய் பல முதலீட்டுகார்களோடு தமிழ் நாட்டில முதலீடு செய்ய பல ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டுள்ளாரம்.”  

“அது எனக்குத் தெரியாதே”

“லிங்கம் உண்டை சொந்த ஊர் அனலைதீவு அதோடை பக்கத்து ஊர் நெடுந்தீவு நயினாதீவுக்கு ஆகிய தீவுகளுக்கு மின்சாரம் கொடுககும் ஒப்பந்தம் சீனாவுக்கு கிடைக்கவில்லையாம் இந்தியா சாணக்கியமாக அந்த திட்டதை பெற்று விட்டதாம் அது உனக்கு தெரியுமா?”

“ ஐயோ எனக்கு அது தெரியாதே”

“ யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இந்திய பிரதமர் மோடி வந்து இறங்கி அங்கு உள்ள கலாச்சார மண்டபத்தை திறந்து வைக்கப் போகிறாராம்

“அப்படியா அது எனக்கு அது தெரியாதே”

“சில தமிழ் கட்சிகளுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே நடந்த முதல் பேச்சுவார்த்தைகளின் பின் அடுத்த பேச்சுவார்த்தை விரைவில் நடக்க போகுதாமே?” 

`

 “ஐயோ எனக்கு அது தெரியாதே.”

“ லிங்கம் நனக்கு தெரியுமா எங்கள் இருவருக்கும் கிடைக்கும் இலங்கை பென்ஷன் இங்க கனடாவுக்கு எடுப்பதற்கு இனி தடை வந்தாலும் வருமாமாம்.” 

 “ ஐயோ அது எனக்குத் தெரியாதே.”

“ நாங்கள் அந்த அங்கை வங்கியில் போட்டு வச்சு சேமிப்பில் கிடைக்கும் வட்டி விகிதம் இன்னும் குறைய போகிறதாம்”

“ அது எனக்குத தெரியாதே.”

“ எங்கடை முதியோர் சங்கத்தில் செயலாளர் பதவிக்கு உன்னோடை போட்டி போட்டு வென்ற  தம்பிப்பிள்ளையை  உனக்கு தெரியும் தானே 

“ தில்லு முல்லு செய்து என்னை வென்ற அந்த கட்டையன் மீசை வைத்த தம்பிப்பிள்ளை தானே :?

: “ஓம் அவன் தான் , அவன் சொந்த ஊர் மாவிட்ட புரம் கோவில் திருவி போனவன் பாவம் அங்கை ஹார்ட் ஆட்டாக்கில் செத்துபோட்டானாம்.” 

 “அப்படியா அது எனக்குத் தெரியாதே.”

“எங்கடை நண்பன் சிவராஜா வின் மகள் மாலதி ஒரு கருப்பனுடன் ஓடிப் போட்டாளாம்”

“அப்படியா நானும் அதை கேள்விப்பட்டனான் . அவளுக்கும் அவனுக்கும் தொடர்பு வெகு காலம் இருந்தது என்று பேச்சு அடிபட்டது, அவன் சிவராஜாவுக்கு தன் மகள் வங்கியில் மனேஜர் என்ற தலை வீக்கம் “

 

“ அது சரி லிங்கம் உன்னுடைய மகன் ரமேஷை நேற்று ஒரு சீனப்பெண் னுடன் டிம் ஹோர்ட்டன்ஸ் உணவகத்தில்  சிரித்து பேசிக் கொண்டு இருந்ததை கண்டன் .அது உனக்கு தெரியுமா?”

அப்படியா எனக்கு நீ இப்போது சொல்லத் தான் தெரிகிறது நான் என் மகனிடம் விசாரிக்கிறன். அவள் ர்மே சுடன் வேலை  செய்கிற பெடிச்சியாக இருக்கலாம் ”. என்றான் லிங்கம்

“உனக்கு தெரியுமா எங்கடை முருகேசுவின் மகன் ராஜன் குடிச்சுப் போட்டு கார் ஓடி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவன் மேல் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

 “எனக்கு எப்பவோ தெரியும் அவன் ஒரு குடிகார பெடியன் எண்டு முருகேசு தன் மகனை சரியாக வளர்க்க இல்லை. . அதோடை என் மகளுக்கு முருகேசு அவனை கலியாணம் பேசி வந்தவன் நான் அது சரி பட்டு வராது என்று சொல்லிப்போட்டன் இப்ப முருகேசுவுக்கு அவனுக்கு வேணும் அவன் முருகேசு தன் மகன் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறான் என்று ஒரு தலைக்கனம்.” 

 “அதுசரி லிங்கம் உன்னிடம் கேட்கிறன் என்று கோவிக்காதை . அது ஏன் உன்னை சார்ந்த விஷயங்கள் மட்டும் உனக்கு தெரியும். மற்ற விசயங்கள் ஒன்றும் உனக்கு தெரியவே இல்லை?”.

“ சரி மச்சான் கோவிக்காதே . எனக்கு வீட்டுக்கு போக நேரமாச்சு நான் போறன் மனுசி சாப்பிடாமல் எனக்காக காத்துக் கொண்டிருப்பாள். இன்னொரு நாளைக்கு சந்தித்துப் பேசலாம்?” 


****

யாவும் புனைவு 


Rate this content
Log in