Miya Cora

Drama Romance Fantasy

3  

Miya Cora

Drama Romance Fantasy

என் காதல் கதை

என் காதல் கதை

1 min
1.2K


     மாயா அவளின் வீட்டிற்கு வெளியில் முன் மண்டியிட்டு அழுகிறாள் அங்கு தூரத்தில் சென்றுகொண்டு இருந்த சிவாவை பார்த்து. சிவா தன் கண்களில் கண்ணீரோடு அவளை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் அவளை விட்டுப் பிரிந்து செல்கிறான். அன்று பெய்த கன மழையை இருவரும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி இருந்தனர். மாயாவின் அப்பா அம்மா மற்றும் அன்று அவருடன் தங்க வந்த தோழியும் அவள் மண்டியிட்டு அழுவதை கண்டு மனம் வருந்தினார். அவளின் தோழி அவளைக் கண்டு அருகில் சென்றாள்.ஆனால் அவள் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

        

மாயா தன் அப்பாவைப் பார்த்து அவரை போக வேண்டாம் என்று சொல்லுங்கள். தன் அம்மாவிடம் அம்மா அவரை வரச் சொல்லுங்கள் என்னை விட்டு போக வேண்டாம் என்று சொல்லுங்கள் அம்மா என்று கூறி அழுது கொண்டிருந்தாள். அருகில் இருந்த தன் தோழியைப் பார்த்து அழுது கொண்டே அவன் என் உயிர், என் உலகம், என் காதல், என் இதயம், என் வாழ்வின் அர்த்தம், அவன் என் மகிழ்ச்சி, அவன்தான் எனக்கு எல்லாம் அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அதையெல்லாம் கேட்டுக் கொண்டே பிரிய மனமில்லாமல் அவன் நகர்ந்து கொண்டு இருக்கிறான்.அவளின் அம்மா அப்பா அவளைக் கண்டு வேதனை கொள்வதை தவிர வேறு எதுவும் செய்யவது அறியாமல் கவலையுடன் நிற்கின்றன. சிறிது நேரத்தில் அவள் மயங்கி விழுகிறாள்.


Rate this content
Log in

Similar tamil story from Drama