Pon Kulendiren

Others

5  

Pon Kulendiren

Others

பெட்டிசன் பெரியதம்பி

பெட்டிசன் பெரியதம்பி

10 mins
441



பொன் குலேந்திரன் - கனடா 

கொழும்பில் உள்ள ஹல்ஸ்ட்ராஃப்(Hulftsdrop) இலங்கையின் நீதித்துறை செயல்படும் மையமாகும். அந்த நெரிசலான பகுதியில் உள்ளன கட்டிடங்கள் மிகவும் பழமையானவை, அவை ஒல்லாந்த பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை பிரதிபலிக்கிறது . கொழும்பு 12 யில் உள்ள பகுதிக்கு ஒல்லாந்தரின் கிழக்கு இந்திய கொம்பனியின் அதிகாரியின் ஹல்ஸ்ட்ராஃப் என்பவரின் பெயர் 1656 ஆம் ஆண்டில் வைக்கப் பட்டது. அழுத்கடை என்று இப்பொது அழைக்கப் படுகிறது


 இப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் கருப்பு கோட் ஸுட்டுடன் தங்கள் வாடிக்கையாளர்களுடன் வழக்குகளைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பதைக் காணலாம் . கான்ஸ்டபிள்கள், சார்ஜென்ட், இன்ஸ்பெக்டர்கள் போன்ற பல்வேறுபோலீஸ் துறை அதிகாரிகள் சிலரை கையில் விலங்கிட்ட குற்றவாளிகளோடு செல்வதை காணலாம். வழக்குகளை சந்திப்பவர்கள் முச்சக்கர வண்டிகள் வந்து இறங்குவதை காணலாம். இப்பகுதி வணிக நடவடிக்கைகளின் உச்சத்தில் உள்ளது. என்பதை எடுத்துக் காட்டிற்று அதோடு, செவ்விழனி. வாழைபழம் விற்கும் சில தெரு வியாபாரிகளும், அங்கு வரும் பெரும் பாலோர் செய்த குற்றங்களுக்கான தீர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியவர்களின் மனநிலையை குளிர்விக்கக் வியாபரம் செய்வதை காணலாம். அந்த வளாகத்தில் பகல் நேரத்தில் பல கத்தி குத்தல்களும். கொலைகளும் நடந்துள்ளன, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து சாட்சியம் அளிக்க எந்த சாட்சிகளும் பயத்தில் முன்வருவதில்லை. பல வழக்கறிஞர்கள் நீதிமன்ற வழக்கு ஆவணங்களை தங்கள் அக்குள்ளுக்குள் வைத்துக் கொண்டு செல்வது அவர்கள் செய்யும் வேலையை பிரதிபலித்தது . நீங்கள் தெருவில் நடந்து செல்ல நேர்ந்தால், இந்த வழக்கறிஞர்களின் சிறிய நெரிசலான அலுவலகங்கள் வெவ்வேறு கோணங்களில் தொங்கும் பெயர் பலகைகளை சுமந்து செல்வதைக் காண்பீர்கள்


நன்கு பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் மிகவும் பழமையான அரச மரம் உள்ளது மற்றும் கண்டிய கட்டிடக்கலையில் அழகாக கட்டப்பட்ட ஒரு சிறிய அடைப்பில் புத்தரின் சிலை காணப்படுகிறது. கிரிமினல் மற்றும் பிற முக்கிய வழக்குகள் தொடர்பான தீர்ப்புகளை எதிர்கொள்பவர்கள் புத்தர் சிலக்கு முன்னாள் நின்று, அவர்கள் செய்த கடுமையான குற்றத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற புத்தர் பெருமானை வணங்குவது ஒரு காட்சி . அரச . மரத்திலிருந்து சில அடிகள் தொலைவில் ரெமிங்டன் தட்டச்சுப்பொறிகள், அகராதிகள் மற்றும் கார்பன் காகிதங்களுடன் போராடும் சில பழைய ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இருப்பதைக் காண முடிந்தது. அவற்றின் முக்கிய சொத்துக்கள் ஒரு சிறிய அட்டவணை, மடிக்கக்கூடிய நாற்காலி மற்றும் பழைய ரெமிங்டன் தட்டச்சுப்பொறி மற்றும் சில நிலையானவை. மடிக்கணினிகள், டெஸ்க்டாப்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் அலுவலகத்துடன் தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும், இந்த மனிதர்கள் காலப்போக்கில் மாற விரும்பவில்லை. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பழையநம்பிக்கையான தட்டச்சுப்பொறியுடன் அவர்கள் மிகவும் வசதியாக இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள், மேலும் சிலர் கணினியை விட நம்பகமானவர்கள் என்று கூறுகிறார்கள். அவர்களின் மூளையைத் தூண்டுவதற்கு, அவர்கள் மனுக்கள், முறையீடுகள் மற்றும் பயன்பாடுகள் மற்றும் பிற நீதி ஆவணங்களைத் தட்டச்சு செய்யும் போது, மூலையில் இருந்த தேநீர் கடையில் இருந்து பையன் கோப்பி தேநீர் வினியோகிப்பதை காணலாம் . அவனுக்கு எவருக்கு சர்க்கரை வியாதி உண்டு அல்லது இல்லை என்பது தெரியும்,

இந்த பெட்டிசன் என்ற மனு எழுததும் எழுத்தாளர்களில் பலர் கடிதம் எழுதும் நடைமுறைகள் மற்றும் படிவங்கள் நிரப்பப்பட வேண்டிய முறை பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களில் சிலர் சிறிய வழக்குகள் குறித்து சட்ட ஆலோசனைகளையும் வழங்குவார்கள் அதுமட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட வகை வழக்குகளுக்கு தொடர்பு கொள்ள தமக்கு தெரிந்த சிறந்த வழக்கறிஞரை பரிந்துரைப்பார்கள் . இந்த மனு எழுத்தளர்களின் வயது அறுபதுகளுக்கு மேல் இருந்தாலும், தட்டச்சு செய்யும் வேகம் மிகபிரமிக்கத் தகாது ஒரு நிமிடத்து குறைந்தது எண்பது வார்த்தைகள் தட்டச்சு செய்யயக் கூடியவர்கள் , அவர்களில் பலருக்கு இரண்டு மொழிகளிலும் தட்டச்சு செய்யும் நல்ல அனுபவம் உள்ளது.சிலருக்கு சுருக்கெழுத்தும் தெரியும்.


வழுக்கைத் தலையுடன் தோற்றம் அளிக்கும் பெரியசாமி, ஒரு பழைய கருப்பு நிற கோட் வெள்ளை நிற சேர்ட் மற்றும் ஓரளவு கிழிந்த டை ஆகியவற்றைக் கொண்டுஓரளவுக்கு அழகாக உடையணிந்து இருந்தார் , நெற்றியில்ல திருநீற்றுக் குறி மனுக்களைத் தட்டச்சு செய்வதில் மும்முரமாக இருந்தவர்களில் “பெரி” என்ற பெரிய சாமியும் ஒருவர். அவர் பொது எழுத்தர் சேவையில் (General Clerical service)இருந்து ஓய்வு பெற்ற அரச ஊழியர். அவர் தனது 30 ஆண்டு சேவையில் பல்வேறு அரச துறைகளில் பணியாற்றிவர் . அவரது இறுதி ஆறு ஆண்டுகள் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் தலைமை கிளார்காக இருந்தவர். அவர் பழைய கருப்பு தோல் பாக்கை எபோதும் தான் அரச சேவையில் இருந்ததை நினிவூட்ட கையில் கொண்டு செல்வார்,

. கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து தலைமை எழுத்தராக ஏ.ஜி. அலுவலகத்திற்கு மாற்றப்பட்டபோது அவரது சேவைகளுக்காக அந்த பாக் அவருக்கு வழங்கப்பட்டது. முக்கியமான ஆவணங்களை எடுத்துச் செல்வதற்கு அவர் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பதை நிரூபிக்கும் அடையாளமாகவும்இருந்தது . அந்த தோல் பாக் அவரை மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாத்தது. இந்த தோல் பாக் சப்பாத்து திருத்துபவன் கைகளில் மூன்று ஆப்ரேஷன்களைக் சந்தித்து விட்டது, மேலும்ஆப்ரேஷன்களின் வடுக்கள் கைப்பிடி மற்றும் வெளிப்புற பாக்கில் காணப்படுகின்றன. அந்த வடுக்கள் பையின் ஆயுள் அடையாளமாக இருந்தன. பெரியசாமி ஒருபோதும் செருப்பைத் தவிர வேறு காலணிகளை அணிவதில்லை.


 

  

 

(2)

. மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட பெரியதம்பிக்கு, இளப்பாறிய பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விருப்பமில்லை. அதோடு பல காலம் அங்கு அவர் வாழாத படியால் அவருக்கு அறிந்தவர்கள் மிக குறைவு கொழும்பில் பல வருடங்கள் வாழ்ந்தவர். பெரி . பல இன மக்களுடன் பழகியவர் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரிந்தவர். அவருடன் வேலை செய்த ஈஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்தவர். ஈஸ்வரி பிறந்தது தெஹிவளையில். அவளின் தந்தை ஆறுமுகம் காரைநகரைச் சேர்ந்தவர். தெஹிவளையில் உள்ள காலி வீதியில் ஒரு பலசரக்கு கடைவைத்திருந்தவர் .அல்பர்ட் பிளாசில் உள்ள ஆறுமுகத்தின் வீட்டில் முன் அறையில் பெரியசாமி தங்கி ருந்த பொது அவரின் மகள் ஈஸ்வரியுடன் நெருக்கம் ஏற்பட்டது வெள்ளவத்தையில் உள்ள ஒரு கல்லூரியில் ஈஸ்வரி ஆங்கில ஆசிரியையாக இருந்தவள்  காலப் போக்கில் ஈஸ்வரிக்கும் பெரியசாமிக்கும் காதல் மலர்ந்தது. ஆறுமுகம் தம்பதிகளின் சம்மத்துடன் ஈஸ்வரியை பெரியசாமி திருமணம் செய்தார். பெரியசாமிக்கும் ஈஸ்வரிக்கும் திருமணமாகி ஐந்து வருடங்களில் ஒரு மகனும் மகளும் பிறந்தார்கள்.

 தன் மனைவி, ஈஸ்வரி. மகன் கணேசன் மகள் சாந்தியோடு பெரியதம்பி கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மூன்று அறைகளைக் கொண்ட அப்பார்ட்மெனடில் வாழ்ந்துவந்தார். அவர மகன் கணேஷ், மருந்துவகைகளை விற்கும் மெடிக்கல் சேல்ஸ்மனாக வேலை பார்த்துவந்தான். ஈஸ்வரியின் மறைவுக்குப் பின் பெரிக்கு திருமணமாகாத இரு பிள்ளைகள் தான் உலகம்;. அவர்களுக்குத் திருமணமாகாததையிட்டு பெரிக்கு பெரும் கவலை. தன் உழைப்பின் ஒரு பகுதியை மகள் சாந்தியின் திருமணத்துக்கு சீதனமாக சேர்த்து வந்தார்.

****


 


(3)

மடித்து வைக்கக் கூடிய மேசையை, தினமும் வேலை செய்யும்; இடத்தில்;பெரி பிரித்து வைத்தார். அந்த மேசையை வேலை முடிந்து வீடு திரும்ப முன் மடித்து அருகில் உள்ள சோமசிரியின் தேனீர் கடையில், ஓரமாக வைத்துவிட்டு போவார். சோமசிரியை பெரிக்கு வேலை செய்த நாட்கள் முதல் கொண்டே தெரியும். வேறு எவரையும் தான் வேலை செய்யும் இடத்தை ஆக்கிரமிக்க விடமாட்டார். இலகுவில் கையில் எடுத்துச்செல்லக் கூடிய, இரைச்சல் இல்லாத, பல வருடங்கள பாவித்த ரெமிங்டன் டைப்ரட்டரையும், தேவையான பேப்பர்களையும், கார்பனையும் எடுத்து மேசையில் வைத்தார். ரெமிங்டன் டைப்ரட்டர், அவர் ரிட்டையரான போது, அவரோடு வேலை செய்தவர்கள் தங்கள் அன்பளிப்பாக அவருக்கு கொடுத்தது.


பெரி வந்ததைக் கண்;ட சோமசிரியின் தேனீர்கடையில் வேலை செய்யும் பையன் சிறிசேனா> வழக்கம் போல் பெரிக்கு பிடித்தமான இஞ்சி போட்டத்தெனீருடன் அவரி;டம் வந்தான். சிறிசேனா கொடுத்த தேனிரை அருந்திவிட்டு பெட்டிசன் எழுத் பெரி தயாரானார்.


ஏற்கனவே அவரிடம் பெட்டிசன் எழுதுவதற்காக ஒருவர் காத்துக் கொண்டு நின்றார். ஒரு நளைக்கு குறைந்தது பத்து பெயராவது பெட்டிசன் எழுதித் தரும்படி பெரியிடம் வருவார்கள். அதனால் அவருக்கு சில நாட்களில் குறைந்தது ஐந்நூறு ரூபாய்களுக்கு மேல் வருமானம் கிடைத்தது.; பெட்டிசன் எழுதி; மாதாந்தம் கிடைக்கும் வருமானம் சில மாதங்களில் பெரிக்கு கிடைக்கும் பென்சனை விட அதிகமாகவும் இருக்கும். மனுக்களைச், சுருக்கமாகவும், தெளிவாகவும், இலக்கணப் பிழையின்றி, சட்டரீதியாக எழுதும் திறமை படைத்தவர். மனுக்கள் மட்டுமன்றி சில முக்கிய பத்திரங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பதிலும் திறமை உள்ளவர்.அவருக்கு வேலையில் துணை ஒக்ஸ்போர்ட் டிக்சனரி. மூக்கு போடி டப்பாவை தவறாமல் எடுத்து செல்வார் . போடி போடுவதால் அவரின் மூளை சுறு சுறுப்பாக வேலை செய்யும் என்று தன் நண்பன். மைக்கலுக்கு சொலவ்ர். அவரோடு ஒன்றாக வேலை செய்தவன் மைக்கல் என்ற பறங்கி.. இருவரும் விழி முடிந்ததும் பாகத்தில் உள்ள பாருக்கு போய்; களைப்பு தீர இரண்டு கிளாஸ் சாராயம் குடிப்பார்கள் . அப்போது தங்களின் கடந்த கால அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள் .


பெரிக்கு தான் மனுக்கள் எழுதி வென்ற கேசுகளைப் பற்றி அடிக்கடி மைக்கலுக்கு சொல்லிக்காட்டுவதில் மனத்திருப்தி;. அதில் ஒரு கேஸ், அவரோடு வேலை செய்த பர்னாந்தோவுடையது. கோபக்காரனான நீர்கொழும்பை சேர்ந்த பர்னாந்தோவுக்கு பெரியோடு நெருங்கிய சினேகிதம்;. 1983ஆம் நடந்த இனக்கலவரத்தின் போது பெரியைப் பாதுகாப்பாக அவர் வீட்டுக்கு ஆபிசில் இருந்து கூட்டிச் சென்றவன் பர்னாந்து. அந்த உதவியைப் பெரி மறக்கவில்லை. அதுமட்டுமல்ல, தான் எழுதிய கடிதங்களை பெரிக்கு காட்டி அபிப்பிராயம் கேட்காவிட்டால் பர்னாந்தோவுக்கு திருப்தியில்லை.


ஒரு நாள்; பிரதம லிகிதர் மகிந்தா, பர்னாந்தோ முக்கிய பைல் ஒன்றைத் தொலத்துவிட்டதற்காக, பலருக்கு முன்;, அவரைத் தாறுமாறாகப் பேசினார். இருவருக்கு மிடையேலான வாக்குவாதம் முற்றியபோது பர்னாந்தோ கோபம் மீறி பேப்பர் வெயிட்டால் பிரதம லிகிதர் மகிந்தாவை தாக்கினான். இச்சம்பவத்தால், பர்னாந்தோ தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டான். பர்னாந்தோவை தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தியதை ஆட்சேபித்து மேலிடத்துக்கு தக்க காரணங்களோடு மனு எழுதி, திரும்பவும் பர்னாந்தோவுக்கு வேலை எடுத்துக்கொடுத்தவர் பெரி.


சுங்க இலாக்கவைச் சேர்ந்த அதிகாரியான சுமதிபாலா, வணிகர் ஒருவரிடம் லஞ்சம் வாக்கியதற்காக வேலையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டான். மேலிடத்துக்கு அப்பீல் செய்து சுமதிபாலா வேலையைத் திரும்பவும் பெற அப்பீல் கடிதம் எழுதிக் கொடுத்தவர் பெரி. இப்படி ஒவ்வொன்றும் ஒவவொரு விதமான கேசுகளைக் கையாண்ட அனுபவம் உள்ளவர் பெரி. பல வழக்கறிஞர்களோடு அவருக்குத் தொடர்பு இருந்தது.

***



 

  

 

(4 )

அன்று பெரியோடு பேச காத்திருந்தவரின் நெற்றியில் இருந்த திருநீறும், சந்தனப்பொட்டும் , அவரைத் தமிழன்; எனக்காட்டிக் காட்டிக்கொடுத்துவிட்டது. அவரோடு பெரி தமிழில் பேசத்தொடங்கினார்.

“என்னோடு என்ன விஷயமாக பேச நிற்கிறீர்” பெரி வந்தவரை பார்த்துக் கேட்டார்.


“ஐயா என்றை பெயர் தங்கராசா. நான் இருப்பது வெள்ளவத்தையில். பெற்றாவில் ஏற்றுமதி, இறக்குமதி பிஸ்னஸ் செய்கிறன். நீங்கள் பெட்டிசன் எழுதுவதில் கெட்டிக்காரன் என்று லோயர் லோகேந்திரன் சொன்னவர். அது தான் ஒரு பெட்டிசன் எழுத உதவி கேட்டு உங்களிடம் வந்தனான். நீங்கள் தானே பெரியதம்பி ” வந்தவர் பனிவோடுக் கேட்டார்..


“ லோயர் லோகேந்திரனே உம்மை என்னைப் போய் பார்க்கச் சொன்னவர்”? பெரி வந்தவரைக் கேட்டார்.


“ஓம் ஐயா. அவர்தான் என்றை லோயர். லோயர் லோகேந்திரன் என் அண்ணருடைய மருமகன்.”


“ அப்படியா? ஓம் நான்தான் பெரி என்ற பெரியதம்பி. என்ன விஷயம் சொல்லும்”.


“ விஷயம் எனக்கும் உமக்கு மட்டும் தெரிந்தாக இருக்கட்டும். என் மகள் ராணியைப் பற்றியது. அவளைக் கலியானம் செய்வதாகச் சொல்லி ஒருத்தன் ஏமாற்றிப் போட்டான். ராணியைப் போல இன்னொருத்தியையும் அவன் ஏமாத்திப் போட்டான். அவனுக்கு எதிராக ஒரு பெட்டிசன் எழுத வேண்டும்’”


“அப்படியா. நான் இரண்டு பக்கத்தில் பெட்டிசன் எழுத குறைந்தது ஐம்பது ரூபாய் எடுப்பன். பேட்டிசன் இரண்டு பக்கக்துக்கு மேலே எண்டால், அதிக பக்கங்களுக்கு, பக்கத்துக்கு இருபது ரூபாய் வீதம் சேர்ந்து எடுப்பன்.” பெரி தனது பெட்டிசன் எழுதும் கட்டணத்தை வந்தவருக்கு சொன்னார்.


“காசைப்பற்றிக் கவலைப் படாதையுங்கோ ஐயா. எனக்கு என் மகளை ஏமாற்றியவனுக்கு நல்ல பாடம் படிப்பித்தால் போதும்.”


“சரி முழுக்கதையையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லும்”. பெரி தனது நோட் புத்தகத்தைத் திறந்து, பேனாவோடு குறிப்பெடுக்க ஆயித்தமானார்.


“ எண்டை மகள் ராணி அக்கொளண்டானாக வேலை செய்வது சிலேவ் ஐலண்டில் உள்ள கவ்வி இலாக்காவில். வேலைக்கு தினமும் பஸ்சில் போய் வருவாள். ஒருநாள் பஸ் ஸ்டான்டில் அக்கொளண்டானாக லிவர் பிரதர்சில் வேலை செய்யும் ரமேஷ் என்ற இராமலிங்கத்தை ஒரு நாள் ராணி சந்திக்க நேர்ந்தது. தான் ஒரு சார்டட் அக்கொளண்டன் என்று தன்னைப் பற்றி ராணிக்குப் புழுகியிருக்கிறான். ராணியும் லண்டன சி.எம.ஏ சோதனைக்குப் படிப்பதால் ரமேஷின் உதவியைத் தன் படிப்புக்காக நாடியிருக்கிறாள். ரமேஷின் பேச்சில் மயங்கிய ராணி, அவன் விரித்த வலையில விழுந்தாள். தனது அக்கொளண்டன்சி; நோட்சுகளை தருவதாகச் சொல்லி ராணியை ஏமாற்றி தான் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் ரமேஷ். ராணியும் படிப்புக்காக அவனை நம்பி அவன் அறைக்குப் போனாள்.


சில நாட்களாக ராணி வீட்டுக்;கு தாமதமாக வரத் தொடங்கினாள். ஏன் தாமதமாய் வாராய் என்று என் மனைவி கேட்டதுக்கு தனக்கு ஆபிசிலை வேலை அதிகம். அது முடித்துப் போட்டு வர நேரமாகிறது என்று தாயுக்குப் பொய்சொல்லியிருக்கிறாள். ரமேசோடை தான் கொண்ட உறவு ஆபத்தில் போய் முடியுமேன அவள் அறியவில்லை. தான் ரமேசின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறதை அறிந்ததும் ரமேசிடம் தன்னை கலியாணம் செய்யும்படி கேட்டிருக்கிறாள். அவன் முடியாது என்று மறுத்துவிட்டான். ராணியோடு ஒன்றாக வேலை செய்யும் லதா என்ற சிங்களப் பெண் தன் சினேகிதியையும் ரமேஷ ஏமாற்றியவன் என்று ராணிக்குச் சொல்லியிருக்கிறாள்.


“ மேலே நடந்ததை விளக்கமாய் சொல்லும்” பெரி; வந்தவரிடம் விபரம் கேட்டார்


“எனக்குத் தெரியாமல், எங்கள் குடும்பவைத்தியரிடம் போய் தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க உதவும் படி ராணி கேட்டிருக்கிறாள். அவர் மறுத்ததும், ரத்தினம் வைத்தியசாலைக்குப் போய் கருவைக் கலைத்திருக்கிறாள். இதெல்லாம் எனக்கும் என் மனைவிக்கும் தெரியாமல் இது நடந்திருக்கிறது. ஒரு நாள், நான் எனது குடும்பவைத்தியரை சந்திக்க நேர்ந்தபோது போது ராணி தன்னிடம் வந்து> தன்வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கும் படி கேட்டதாகச் சொன்னார். அவர் சொன்ன கதையைக்; கேட்டதும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ராணியை விசாரித்த போது, நடந்த கதை முழுவதையும் சொல்லி அழுதாள.” என்றார் தங்கராசு.


“ பிறகு நடந்தது என்ன”? பெரி ஆவலுடன் கேட்டார்.


“ கலியாணத்தரகர் தம்பையாவிடம் ராமேஸை பற்றி நான் விசாரித்த போது ரமெசை தனக்குத் தெரியுமென்றும். அவனுக்குத் தான் ஒரு பெரிய இடத்தில் கலியாணம் பேசி நடக்கவிருக்கிறது என்றார். ரமேஷ் இன்னும் பல பெண்களை, ராணியைப் போல் ஏமாற்றக் கூடாது என்பதற்காக அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டு;ம் என்று முடிவு செய்தேன். அவனுக்கு எதிராக, அவன் வேலை செய்யும் இடத்துக்கும், அவனுக்கு கலியாணம் பேசி முடிவான பெண் வீட்டாருக்கும்;, ராமேசைப் பற்றி விபரமாய் பெட்டிசன் ஒன்று எழுத வேண்டும். அதுக்குத்தான் உங்களிடம் வந்தனான்” என்றார் பெருமூச்சுடன் வந்தவர்.


பெரி முழுக்கதையையும் கேட்டதும்> தங்கராசாவின் மகள் மேல் அனுதாபப்பட்டார்.


“நீர் சொன்ன கதையைக் கேட்டேன். பெட்டிசனை தாயார் செய்கிறேன். எனக்கு மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் உம்மோடு தொடர்பு கொள்ளுகிறேன். உமது டேலிபோன் நம்பரைத்தாரும்” என்று தங்கராசாவிடம் டெலிபோன் நம்பரைக் கேட்டு, தன நோட் புத்தகத்தில குறித்துக் கொண்டார்.


“ஐயா. எப்ப நான் திரும்பி வர”


“இன்று திங்கட்கழமை. நீர் புதன்கிழமை காலை பதினொரு மணிக்கு வந்து என்னை சந்தியும். பேட்டிசனைத் தயாராக வைத்திருக்கிறன். உமக்கும் சேர்த்து மூன்ற கொப்பிகள் எடுத்துவைக்கிறன். போதும் தானே”


“அது போதும். பேட்டிசனிலை ராணியின்றை பெயர், என்றை பெயர்,. வீட்டு விலாசம் போடவேண்டாம். அதை நான் எழுதிக்கொள்ளுகிறன். திகதியை மட்டும் குறிப்பிடுங்கள்..”


“ரமேஷ் வேலை செய்யும் லிவர் பிரதர்சின் விலாசத்தையும், ரமேசுக்கு கலியாணம் ஒழுங்கான பெண் வீட்டாரின் விலாசத்தையும் நீரே எழுதிக் கொள்ளும். என்ன சரிதானே?”


“நல்லது ஐயா. ரமேசுக்க ஒரு பாடம் படிப்பித்தால் அது எனக்குப் போதும். இந்தாருக்குகோ அட்வான்சாக பணம்” என்று நூறு ருபாய் நோட்டை பெரியிடம் நீட்டினார் தங்கராசு.


“நீர் சரியான பிஸ்னஸ்மன் என்று காட்டிப்போட்டீர்” என்றார் சிரித்தபடி பணத்தை வாங்கிய பெரி.


“நீங்கள் ஆரம்பத்தில் சொன்னபடி மேலதிக பணம் தேவையானால் பெட்டிசனை வாங்கும் போது தாரன்”. என்றார் தங்கராசு.


“நல்லது. நான் சொன்ன மாதிரி மறக்காமல் புதன்கிழமை வந்து பெடடி;சனை வாங்கிக் கொள்ளும். நான் ரெடியாய் வைச்சிருப்பன்”.


“உங்ளைச் சந்தித்ததில் எனக்கு நல்ல சந்தோஷம். எனக்குத் தெரிந்த வேறு எவருக்காவது பேட்டிசன் எழுதத் வேண்டியிருந்தால் உங்களிடம் அவையளை அனுப்புகிறன்”, என்று பெரியை பாராட்டிவிட்டுச் சென்றார் தங்கராசா.


****

 

  

 

(5)

அன்று ஞாயிற்றுக்கிழமை. பெரிக்கு ஓய்வு நாள். பெரியின் சகோதரியின் கணவர் மாணிக்கம், பெரியோடு அவசரமாய் பேச வேண்டு;ம் என்று இரண்டு தடவை போன் செய்ததாக சாந்தி சொன்னாள்.

பெரிக்கும் அவருடைய மைத்துனர் மாணிக்கத்துக்கும் பல காலமாய் பேச்சுவார்த்தையில்லை. தன்றை மகன் கணேசை மாணிகத்தின் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் என்ன என்று மாணிக்கத்திடம் பெரி கேட்டபோது, அவர் சொன்ன பதில் பெரியின் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது.

“மச்சான். உம்முடைய மகன் ஏதோ பெரிய வேலை செய்கிறமாதிரி எண்டை மகளுக்கு கலியாணம் பேசுகிறீh. அவன் கணேஷ் என்ன சாதாரண சேல்ஸ்மன் தானே. படித்து பட்டமும் பெறவில்லை. எண்டை மகள் ஒரு பி ஏ பட்டதாரி. அதோடை வேலையும் செய்கிறாள். அவளுக்கு டொக்டர், என்ஜினியர், அக்கொளண்டன் என்று பல இடங்களில் இருந்து பேசி வநதிருக்குது. ஒரு சேல்ஸ்மென்னுக்கு என்மகளைக் கலியாணம் செய்து கொடுக்க நான் என்ன மடையனே. அதோடை மச்சானுக்கும் மச்சாளுக்கும் இடையே கலியாணம் செய்வது நல்லதல்ல. “ என்று முற்றாக மறுத்துவிட்டார் மாணிக்கம்.


“மாணிகத்துக்கு பணம் இருக்கிற திமிர், அவரை அப்படிப் பேசவைத்துவிட்டது. இப்ப அவருக்கு என்னோடை என்னவாம் கதைக்க வேண்டியிருக்கு?” என்றார் மகள் சாந்தியிடம்.


“ அப்பா, மாணிக்கம் மாமா வந்து உங்களோடை பேசட்டும். என்னவெண்டு அவர் சொல்லப் போவதைப் பொறுமையாய் கேளுங்கோவன். கிட்டத்து சொந்தக்காரர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது. ஒன்றென்றால் ஓடிவருவினம்,” என்றாள் சாந்தி. பெரியின் மனைவி ஈஸ்வரியும் மகள் சொல்வதை ஆமோதித்தாள்.


வேறு வழியின்றி “ சரி சரி அவரை வரச் சொல் “ என்றார் வெறுப்போடு பெரி.


மதிய உணவை முடித்துவிட்டு அன்றைய டெய்லி நியூஸ்; ஆங்கிலப் பேப்பரை வாசித்தபடி, சாய்மானக் கதிரையில் படுத்திருந்தார் பெரி.


“அப்பா> மாணிக்கம் மாமாவும் மாமியும் வந்திருக்கினம், என்று சாந்தி சொல்லிவாய் மூட முன்பே:


“டேய் பெரி என்னை என்ன நினைத்தக்கொண்டாய்” என்ற மாணிக்கத்தின் கோபக் குரல் கேட்டது. டேய் என்று பெரியை மாணிக்கம் அழைத்தது அது தான் முதற்தடவை.

கணவனோடு ஒத்துபாடுவது போல் ”அண்ணை உனக்கேன் இந்த பெட்டிசன் எழுதுகிற வேலை. உனக்கு எங்களிலை கோபம் எண்டால் எங்களுக்கு எதிராகப் பெட்டிசமே எழுதுகிறது. வந்து நேரடியாகக் கதையன்;? என்றாள் பெரியின் சகோதரி.


பெரிக்கு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை.


“ஏன் வீணாகக் கத்துரியல். அப்படி என்ன நடந்தது. விஷயத்தைச் சொல்லுங்கோவன்”?, பெரியும் பதிலுக்கு சற்று கோபத்தோடு தன் குரலை உயர்த்திச் சொன்னார்.


“இங்கைபார் இந்தக் கடிதத்தை. நீ தானே எழுதி உண்டை டைப்பிரயிட்டரிலை டைப்செய்தது? முந்தி எண்டை நணபனுக்கு நீ எழுதின பெட்சனோடு ஒப்பிட்டுப் பர்hத்தனான். அதே அச்சுக்கள். அதே ரைட்டங் ஸ்டைல்.” தான் கொண்டு வந்த கடிதத்தை பெரி பார்ப்பதற்கு மாணிகம் நீட்டினார். கடிதத்தை வாங்கி முதல் நான்கு வரிகளை வாசித்தவுடனேயே பெரிக்கு விஷயம் விளங்கிவிட்டது. அது ரமேஷைப் பற்றி தங்கராசாவுக்கு தான் எழுதிக் கொடுத்த பெட்டிசன் அதுவென்று. பெட்டிசனில் தங்கராசாவின் பெயர் இல்லாமல் “பெரியசாமி” என்று தன் பெயரை மாற்றி கையொப்பமிட்டிருந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை. இப்படி தங்கராசு தன்னை மோசம் செய்வான் என்று தெரிந்திருந்தால் அவன் பெயரைப் போடாமல் கொடுத்திருக்க மாட்டேன.; அப்படி செய்தது நான் விட்ட பிழை. அவனை நம்பி விட்டேன். வாயில் விரலை வைத்து யோசித்தாh பெரி;.


“என்ன மச்சான் யோசிக்கிறீர்?. செய்வதையும் செய்துவிட்டு யோசனை வேறா? உந்தக் கடிதத்திலை குறிப்பிட்ட அக்கொளண்டன் ரமேசுக்கும் என்றைமகள் சுகந்திக்கும் கலியாணம் பேசி ஒழுங்காயிற்று. அதை அறிந்த உமக்கு வயித்தெரிச்சல். அதுக்கு> இப்படியே இல்லாததும் பொல்லாததுமாய் அந்தப் பெடியனைப் பற்றி எழுதுகிறது. உம்மடைய மகனுக்கு எண்டை மகளைக் கொடுக்க நான் சம்மதிக்கவில்லை என்ற ஆத்திரம் உமக்கு”> மாணிகத்தின் குரல் பக்கத்து வீட்டுக்கு கேட்கும் அளவுக்கு இருந்தது.


“அண்ணை உனக்கும் எங்களைப் போல ஒருமகள் கலியாணம் செய்ய இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே. சுகந்திக்கு பேசி வந்த சம்பந்தம் பெரிய இடத்துச் சம்பத்தம். பெடியனும் நல்ல குணமுள்ள படித்த பெடியன். நல்;ல கொம்பெனியிலை வேலை. பெரிய சம்பளமும் எடுக்கிறான். இதையெல்லாம் தெரிஞ்சுதானே உனக்கு வைத்தெரிச்சல்”, பெரியின் சகோதரி என்றுமில்லாத வாறு பெரிமேல் பொரிந்து தள்ளினாள். இவர்கள் வாக்குவாதப் படுவதைக கேட்டுக் கொண்டிருநத சாந்திக்கு ரமேசின பெயர் அடிபட்டவுடன் விஷயம் விளங்கிவிட்டது. ஏன் எண்டால் அவளையும் ரமேஷ் ஏமாற்றப் பார்த்திருக்கிறான். பெரி மனைவியிடம் கேட்டுத் தண்ணீர் வாங்கிக் குடித்தார் .


“மாணிக்கம் உந்த கடிதம் நான் தங்கராசா என்ற வாடிக்கையாளன் ஒருவனுக்கு எழுதிகொடுத்த கடிதம். அனை நம்பி, பெயரையும் விலாசத்தையும் அவன் கேட்டபடி நான் போடவில்லை. அதில் தான் கையொப்பம் இடுவதாகச் சொன்னான். எனக்குத் தெரியாது ரமேசை உண்டை மகளுக்கு பேசியருக்கிறது எண்டு.” தான் பெட்டிசனை எழுதி ஒரு வாடிக்காயளனுக்குக் கொடுத்ததை பெரி ஒப்புக்கொண்டார்.

பெரியிடம் இருந்து கடிதத்தை விறுக்கென பறித்தபடி “உந்தக் கடிதத்திலை என்ன எழுதியிருந்தாலும் நான் நம்புவதாக இல்லை. இதல்லாம் எண்டை குடும்பத்தின் மேல் உனக்கு உள்ள பொறாமையினால் நீ செய்த வேலை. என்ன பெட்டிசன் நீ எழுதினாலும் என்றை மகளுக்கும், ரமேசுக்கும் கலியாணம் நடந்தே தீரும்.“ என்று கோபத்தோடு தனது முடிவை சொல்லிவிட்டு மாணிக்கம் போனார். மாணிக்கத்தின் மனைவி தன் அண்ணி ஈஸ்வரியோடு ஒருவார்த்தை கூடப் பேசாமல் கணவனைப் பின் தொடர்ந்தாள்.


“எது எது, எப்ப எப்ப, எப்படி எப்படி, நடக்க வேண்டுமோ, அது அது, அப்ப அப்ப, அப்படி அப்படி நடக்கும். எல்லாமே தலை விதிப்படியே.” என்று தன் வாயுக்குள் முணுமுணுத்தார்; பெரிய்த்ம்பி .


****


Rate this content
Log in